கா்ப்பிணிக்கு நள்ளிரவில் பிரசவம் பார்த்த காவலர்

கா்ப்பிணிக்கு நள்ளிரவில் பிரசவம் பார்த்த காவலர்

1 mins read
5aabdc64-7b62-4b86-9ea5-f6f8dd29d49e
அதிகாலை நேரத்­தில் பிர­சவ வலி­யால் துடித்த ஆத­ர­வற்ற பெண்­ணுக்கு தலை­மைக் காவ­லர் இள­வ­ரசி பிர­ச­வம் பார்த்து தாய்-சேயைக் காப்பாற்றினார்.படம்: தமிழக ஊடகம் -

வேலூர்: வேலூர் அருகே கண­வனால் கைவி­டப்­பட்டு, பிச்­சை­எடுக்­கும் சூழ­லுக்­குத் தள்­ளப்­பட்டு, சாலை­யோ­ரம் தங்கியிருந்த கர்ப்­பிணிப் பெண் ஒரு­வர், பிர­சவ வலி ஏற்­பட்டு கதறி உள்­ளார்.

இதை­ய­றிந்த பெண் தலை­மைக் காவ­லர் ஒரு­வர் பிர­ச­வம் பார்த்த சம்­ப­வம் நெகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அழ­கான பெண் குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த பெண்ணை சேயு­டன் வேலூர் அரசு மருத்­துவ மனை­யில் சேர்த்துள்ளனர்.

வேலூ­ரில் உள்ள தெற்கு காவல்­நி­லை­யத்­தில் தலை­மைக் காவ­ல­ரா­கப் பணி­யாற்­றும் இள­ வ­ரசி கூறு­கை­யில், "ஆந்­திர மாநி­லத்­தைச் சோ்ந்த­வர் சபானா, 30. இவ­ருக்கு 6 வய­தில் ஆண் குழந்தை உள்­ள நிலையில், இரண்­டா­வ­தாக தாய்மை அடைந்த சபா­னாவை அவ­ரது கண­வர் கைவிட்டு, வேறு பெண்­ணு­டன் சென்­று­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

"தனது குடும்­பத்­தி­ன­ரின் ஆத­ர­வும் இல்­லாமல் தவித்து வந்த சபானா வேலூ­ரில் பிச்­சை­ எ­டுத்து வந்­துள்ளாா். தாயும் குழந்­தை­யும் நல­மாக உள்­ளனா். சிகிச்­சைக்­குப் பிறகு சபானாவை பாது­காப்பு இல்­லத்­தில் சோ்ப்பதற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது," என்றார்.