கடலில் கால் நனைக்க மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை

2 mins read
fc8b7e7f-28ba-4dad-b619-2d5116d32da1
-

சென்னை: கடல்­நீ­ரில் கால் வைத்து மகிழ்­வ­தற்­கான வசதி வாய்ப்­பு­கள் கிடைக்­கா­மல் நீண்ட நாள்­க­ளாக தமி­ழக மாற்­றுத் திற­னா­ளி­கள் பல­ரும் வருத்­தப்­பட்டு வந்­த­னர்.

இந்­நி­லை­யில், அவர்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­தும் வித­மாக சென்னை மெரினா கடற்­க­ரை­யில் மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான நிரந்­தர நடை­பாதை வசதி விரை­வில் பயன்­பாட்­டுக்கு வர­வுள்­ளது.

உல­கின் இரண்­டா­வது பெரிய கடற்­க­ரை­யான மெரி­னா­வில் மாற்­றுத் திற­னா­ளி­கள் பயன்­பெ­றும் வகை­யில், நிரந்­தர நடை­பாதை அமைக்­கப்­படும் என அண்­மை­யில் தமி­ழக அரசு அறி­வித்­தி­ருந்­தது.

இதைத்­தொ­டர்ந்து, இப்­போது மெரி­னா­வி­லும் பெசன்ட் நகர் கடற்­க­ரை­யி­லும் மாற்­றுத் திற­னாளி களுக்­கான தனிப்­பாதை அமைக்­கும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

மெரி­னா­வில் 250 மீட்­டர் நீளம், 10 அடி அக­லத்­தில் நடை­பா­தையை அமைக்­கும் திட்­டத்­தில் ஊழி­யர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

ரூ.1 கோடியே 14 லட்­சம் செல வில் நடை­பெ­றும் பணி­கள் 80 விழுக்­காடு முடி­வ­டைந்­து­ள்ள நிலை யில், அடுத்த மாதம் இந்த நடை பாதை வசதி பயன்­பாட்­டுக்கு வரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கட­லில் இறங்­கும் நீண்ட நாள் கனவை நிறை­வேற்­றும் வகை­யில் அமைக்­கப்­படும் நிரந்­தர பாதை வசதி மன­துக்கு புதிய உற்­சா­கத்­தைக் கொடுப்­ப­தாக மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் தெரிவித்து உள்­ள­னர்.

"எனக்கு 38 வய­தா­கி­விட்­டது. இன்­னும் நான் கட­லில் கால் வைத்­த­தில்லை. ஏனெ­னில், என்­னைப் போன்ற மாற்­றுத் திறனாளி­கள் பயன்­ப­டுத்­தும் ஊன்றுகோல்­கள் கடல் மண­லுக்­குள் புதைந்து சிர­மத்தை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தால் கடற்­கரை பக்­கம் செல்­வ­தில்லை.

"எங்­க­ளது ஏக்­கத்­தைப் போக் கும் வகை­யில் தனி நடை­பாதை வசதி கிடைத்­துள்­ளது," என தீபக் என்ற மாற்­றுத்திற­னாளி தெரிவித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தின் பிற கடற்­க­ரை­யிலும் இந்த வச­தி செய்து தரப்பட வேண்­டும் என மாற்­றுத்­தி­ற­னாளி கள் பல­ரும் கோரியுள்­ள­னர்.

நடை­பா­தை­யில் பாது­காப்­பாக செல்­லும் வகை­யில் இரு­பு­ற­மும் கைப்­பி­டி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­து­டன், கழி­வறை வச­தி­களும் அமைக்­கப்­பட உள்­ள­தாகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.