ரூ.1,000 கோடிக்கு நடந்த 'பிட்காய்ன்' மோசடி

ரூ.1,000 கோடிக்கு நடந்த 'பிட்காய்ன்' மோசடி

2 mins read
6dfb3482-7d53-47fe-9238-ddb5539f534f
-

ஓசூ­ர்: கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் 'பிட்­காய்ன்' மோசடி தொடர்­பாக 12 மணி நேரம் சோதனை நடத்­திய காவ­லர்­கள், இரு­வ­ரைக் கைது செய்­த­து­டன் ஒரு கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­க­ளைப் பறி­முதல் செய்­த­னர்.

ஓசூ­ரில் உள்ள தனி­யார் நிறு­வனம் ஒன்று, 'பிட்­காய்ன்' திட்டத் தில் முத­லீடு செய்­தால் பணத்தை இரட்­டிப்­பாக்­கித் தரு­வ­தாக ஆசை வார்த்தை கூறி விளம்­பரம் செய்­தது.

அத்­து­டன், நாட்­டின் பல்­வேறு பகு­தி­களிலும் முக­வர்­களை நிய­மித்து இத்திட்டத்துக்கு ஆள் சேர்க்­கும் பணி­யி­லும் ஈடு­பட்­டது.

தமி­ழ­கம் மட்­டுமன்றி ஆந்­திரா, கர்­நா­டகா உள்­ளிட்ட மாநி­லங் களையும் சேர்ந்த ஏரா­ள­மா­னோர் இந்த நிறு­வனத்தில் முத­லீடு செய்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

தமி­ழ­கத்­தில் கிருஷ்­ண­கிரி, தர்­ம­புரி, திரு­வண்­ணா­மலை, கன்­னியா­கு­மரி, வேலூர், மதுரை உள்­ளிட்ட இடங்­க­ளி­லும் முக­வர்­களை நிய­மித்து அந்த நிறு­வ­னம் பண வசூ­லில் ஈடு­பட்­டுள்­ளது.

கிருஷ்­ண­கிரியில் முத­லீடு செய்­ த­வர்­களிடம் தாங்கள் சொன்னது சொன்னபடி பணத்தை இரட்­டிப்­பாக்­கித் தரா­த­தால், பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மாவட்ட ஆட்­சி­யர், காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ள­ரி­டம் புகார் அளித்­த­னர்.

இதை­ய­டுத்து, கிருஷ்­ண­கிரியில் உள்ள தனி­யார் நிறு­வன உரி­மை­யா­ளரின் வீடு உட்­பட எட்டு இடங்­களில் பொரு­ளா­தா­ரக் குற்­றப்­பி­ரிவு காவ­லர்­கள் நேற்று முன்தினம் இரவு வரை சோதனை நடத்­தி­னர்.

12 மணி நேரமாக தொடர்ந்து நடை­பெற்ற சோதனை முடி­வுற்­றதை அடுத்து, மோச­டி­யில் ஈடு­பட்­ட­தாக பிர­காஷ், சீனி­வா­சன் ஆகி­யோரை காவ­லர்­கள் கைது­செய்­த­னர்.

அவர்களது கார்­கள், சொத்­துப் பத்­தி­ரங்­க­ளைப் பறி­மு­தல் செய்த காவ­லர்­கள், 'பிட்­காய்ன்' மோசடி குறித்து விசா­ரி­த்து வரு­கின்­ற­னர்.

கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் மட்­டும் ரூ.20 கோடி வரை அந்த தனி­யார் நிறு­வ­னத்­தி­னர் மோசடி செய்­துள்­ள­தா­க­வும் நாடு முழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.