வேலை வழங்குவதாக மோசடி; காணொளி பகிர்ந்து தங்களைக் காப்பாற்றும்படி கதறல் மியன்மாரில் தவிக்கும் 16 பேர்

வேலை வழங்குவதாக மோசடி; காணொளி பகிர்ந்து தங்களைக் காப்பாற்றும்படி கதறல் மியன்மாரில் தவிக்கும் 16 பேர்

2 mins read
168f2fb2-c584-424c-ba49-25ced2ae5191
மியன்மாரில் சிக்கித் தவிக்கும் இளையர்கள். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கம், ஆந்­திரா உள்­ளிட்ட இந்­தி­யா­வின் பல்வேறு மாநி­லங்­களில் இருந்­தும் வெளி­நாட்­டில் பணி­பு­ரியச் சென்ற 16 பேருக்கு அங்கு சரி­யான வேலை வழங்­கப்­ப­டவில்லை.

மாறாக தாங்கள் தாக்கப்பட்டு, துன்­பு­றுத்­தப்­பட்டு வருவதாக வெளி யான காணொளி அதிர்ச்­சியை ஏற்­படுத்தி உள்ளது.

இந்நிலை­யில், திருப்­பெ­ரும்­பு­தூர் தொகுதி எம்­எல்ஏ செல்­வ­பெ­ருந் தகை, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் காணொ­ளி­, புகைப்­ப­டங்­கள் குறித்த விவரங்களை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கவ­னத்திற்­குக் கொண்­டு­சென்­றுள்­ளார்.

காணொ­ளிப் புகார் குறித்து மத்­திய, மாநில அர­சு­கள் உரிய நட­வ­டிக்கை எடுத்து, பாதிக்­கப் பட்­டுள்ள ஒரு பெண் உள்­பட 16 பேரை­யும் மியன்­மா­ரில் இருந்து உட­ன­டி­யாக மீட்­க­வேண்­டும் என செல்­வ­பெ­ருந்­தகை கோரி­யுள்­ளார்.

தமி­ழ­கம், புது­டெல்­லி­ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனி­யார் முக­வர் மூலம் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­வ­தற்­காக 16 இளை­யர்­கள் துபாய் சென்­றுள்­ள­னர். ஆனால், அங்கு பணி இல்லை எனக்­கூறி தாய்­லாந்து நாட்­டிற்கு அவர்களை அனுப்பியுள்­ள­னர். அதன்­பி­றகு அங்­கே­யும் பணி இல்லை எனக் கூறி அவர்­களை அங்­கும் இங்­கு­மாய் அலைக்­க­ழித்­துள்­ள­னர். இப்போது, சட்டவிரோத மாக மியன்மாரில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

அத்­து­டன், கொடு­மை­யாகத் தாக்­கப்­பட்­டு, சட்­டத்­திற்­குப் புறம்­பாக பணி ­செய்­யும்­ப­டி­யும் வற்­புறுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

இந்த வேலையைச் செய்ய விரும்­பா­த­வர்­கள் 5,000 அமெ­ரிக்க டாலர்­ கொடுக்­க­வேண்­டும் என்­றும் இல்லையேல், மின்சார அதிர்ச்சி, அடித்தல், உணவு தராமல் இருத்தல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்படும் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற இளையர் பகிர்ந்துள்ள காணொ­ளி­யில், தாங்­கள் சொல்ல முடி­யாத துய­ரத்­தில் இருப்­ப­தாகவும் தங்களைக் காப்பாற்றும்படியும் வேத னையுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

"சித்­திர­வ­தைக்கு ஆளான தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் பேசும் காணொ­ளி­யைப் பார்க்­கும்­போது மிகுந்த வேதனை ஏற்­ப­டு­கிறது. தமி­ழ­கத்­தில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட வெளி­நா­டு­வாழ் தமி­ழர் நலத்­துறை பெய­ர­ள­விற்கு மட்­டு­மல்லா­மல், செயல்­ப­டக்­கூ­டி­ய­தா­க­வும் இருப்­பது அவ­சி­ய­ம்," என்று அமமுக பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி தின­க­ரன் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.