செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d781f595-9886-4efb-bd59-3313b9ca3b13
'மைனர்' பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட திருநாவுக்கரசு.படம்: ஊடகம் -

பேருந்து, லாரி ஓட்டுநர்கள் கைது

சேலம்: சேலம் மாவட்­டம், வாழப்­பாடி அருகே நின்­று­ கொண்­டி­ருந்த சொகு­சுப் பேருந்து மீது மணல் லாரி மோதி­ய­தில், மஞ்­சள் நீராட்டு விழா­வுக்குச் சென்­று ­கொண்­டி­ருந்த ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஐவரும் பேருந்தின் உதவியாளரும் என ஆறு பேர் உயி­ரி­ழந்­த­னர். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் காவலர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில், லாரி ஓட்டுநர் கார்த்திக், பேருந்து ஓட்டுநர் பரமேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

200 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திராவின் ஏழு பேர் சிறையில்

ெசன்னை: சென்னை செங்குன்றம் பகுதி அருகே காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த ஆந்திரப் பதிவெண் கொண்ட இரண்டு கார்களைச் சோதனை செய்தனர். அந்தக் கார்களுக்குள் 200 கிலோ கஞ்சா இருந்தது. கார்களும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

காரில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். விசாகப்பட்டி னத்தில் இருந்து கஞ்சாவைக் கடத்திவந்தது தெரியவந்தது.

யானை குளிக்க ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள 19 வயது யானை ஜெயமால்யதாவுக்கு ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யானைப் பாகன்கள் கூறுகையில், ''புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஜெயமால்யதா தினசரி குளித்து மகிழ்கிறது. குளத்தில் இறங்கியவுடன் சிறு பிள்ளைபோல் அங்கும், இங்கும் சென்று தண்ணீரை துதிக்கையால் வாரி இறைத்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறது,'' என்றனர்.

காதல் திருமணம் செய்த இளைஞர் மருத்துவமனையில்

திருப்­பத்­தூர்: இன்­னும் திரு­மண வயதை எட்­டாத 'மைனர்' பெண்ணைத் திரு­ம­ணம் செய்துகொண்ட இளை­யர் ஒருவர், காவலர்­கள் தன்­னைக் கைது செய்து சிறை­யில் அடைத்துவிடு­வார்­கள் என்ற பயத்­தில் தனது உயிரை மாய்த்­துக்­கொள்ள தீக்­கு­ளித்­தார். இதனால், பலத்த தீக் காயம் அடைந்த இளையர், ஆபத்­தான நிலை­யில் வேலூர் அரசு மருத்­து­வம­னை­யில் சிகிச்­சை பெற்று வரு­கி­றார்.

திருப்­பத்­தூர் மாவட்­டம், வாணியம்­பா­டி­யைச் சேர்ந்­த­வர் போடி என்­கிற திரு­நா­வுக்­க­ரசு, 21. கூலித் தொழி­லா­ளி­யான இவர் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை நான்கு ஆண்­டு­க­ளாகக் காத­லித்து வந்த நிலை­யில், கடந்த 13ஆம் தேதி திரு­ம­ணம் செய்துகொண்­டார். பெண்ணின் தாய் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.