இருவரின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்

இருவரின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்

1 mins read
083b281d-1b60-44e4-9ce1-e652d0963522
நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்த விக்னேஷ், ரிச்சர்ட்.படம்: ஊடகம் -
multi-img1 of 2

குன்­றத்­தூர்: நண்­பர்­கள் இரு­வர் செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­யின் மத­கில் நின்று செல்ஃபி எடுத்­த­போது, ஏரிக்­குள் தவறி விழுந்து உயிரி ழந்­த­னர்.

இளை­யர்­க­ளின் உடல் குரோம் பேட்டை அரசு மருத்­து­வ­ம­னைக்கு உடல்­கூ­ராய்வு பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து குன் றத்­தூர் காவ­லர்­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

தலை­ந­கர் சென்­னையை அடுத்த குன்­றத்­தூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் விக்­னேஷ், 20. கார் பழு­து­பார்ப்­ப­வ­ராக பணி­பு­ரிந்து வந்­தார்.

இவ­ரது நண்­பர் ரிச்­சர்ட், 16. அதே­ப­கு­தி­யில் வசித்து வந்த ரிச்சர்ட் பன்­னி­ரெண்­டாம் வகுப்­பில் படித்­து­வந்­தார்.

இந்­நி­லை­யில், இவர்­கள் இரு­வ­ரும் நேற்று முன்­தி­னம் மாலை செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­யைச் சுற்றிப் ­பார்க்க இரு சக்­கர வாக­னத்­தில் சென்­றுள்­ள­னர்.

ஏரி­யைச் சுற்­றிப் பார்த்­து­விட்டு அங்­கி­ருந்த மத­கின் மீது நின்­ற­படி இரு­வ­ரும் செல்ஃபி எடுத்­துள்­ள­னர். அப்போது, எதிர்­பா­ரா­த­வி­த­மாக இரு­வ­ரும் ஏரிக்­குள் தவறி விழுந்­த­னர். இத­னைக் கண்ட பொது­மக்­கள் அவர்­களை மீட்க போரா­டிய போதி­லும் அவர்­க­ளால் முடியவில்லை.

நீண்ட நேர போராட்­டத்­திற்­குப் பிறகு தீய­ணைப்பு வீரர்­கள் இரு­வ­ரின் உடல்­க­ளை­யும் மீட்­ட­னர்.

செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­யில் குளிக்­கும்­போ­தும் செல்ஃபி எடுக்­கும்­போ­தும் உயிர்ப் பலி ஏற்­ப­டு­வது தொடர்­கதை­யாகி வரு­கிறது. இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்க காவ­லர்­கள் நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும் என செம்­ப­ரம்­பாக்­கம் பகுதி மக்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.