சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் ஓடு பாதை விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
அனைத்துலக விமான நிலையத்தில் ஏர்பஸ் A-380 போன்ற பெரிய விமானங்கள் இறங்குவதற்கு ஏதுவாக ஓடுதளத்தின் நீளம் 4.058 கிலோ மீட்டர் அதிகரிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
ஏர்பஸ் A-380 விமானங்கள் மூன்று அடுக்குகளைக் கொண்ட அகலமான விமானங்களாகும். அதற்கு ஏற்ற வகையில் பிரதான ஓடுபாதை விரிவுபடுத்தப்படுகிறது.
சென்னைக்கு வரும் அனைத்துலகப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு வதால் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.
பரந்தூரில் அமையும் அந்த விமான நிலையம் நவீன வசதி களைக் கொண்டிருக்கும். இதற் கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இருந்தாலும் புதிய விமான நிலையத்தைக் கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம் என்பதால் மீனம்பாத்தில் உள்ள பிரதான ஓடு பாதையின் நீளத்தை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் சிங்கப்பூர், ஐக்கிய அரபு சிற்றரசு போன்ற நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் ஏர்பஸ் A-380 பெரிய விமானங்களை தரையிறக்கம் செய்ய முடியும்.
தற்போது டெல்லி, மும்பை, பெங்களுரு ஆகிய நகரங்களில் மட்டுமே இத்தகைய வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு இதுவரை A-380 விமானங்கள் தரையிறங்கியதில்லை. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 746 பேர் பயணம் செய்யலாம். மூன்று மாடிகளை இது உள்ளடக்கியிருக்கிறது.