சிதம்பரம்: சிதம்பரத்தைச் சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி ஜெயந்தி மா.அரசு கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மேலபருத்திக்குடி அருகே சென்றபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த சந்தேகப் பேர்வழிகள், ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.
சுதாரித்துக்கொண்ட ஜெயந்தி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, தாலிச் சங்கிலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உதவி கோரி கத்தினார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்ததும் திருடர்கள் சங்கிலியைப் பறிப்பதை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பொதுமக்களில் சிலர் இரு சக்கர வாகனத்தில் திருடர்களை விரட்டினர். காவலர்களுக்கும் இந்த தகவல் போனது.
மக்களும் காவலர்களும் விரட்டு வதைப் பார்த்து அச்சமடைந்த திருடர்கள் குறுவக்குடி கிராமத்தில் இருசக்கர வாகனத்தைப் போட்டு விட்டு ஆற்றில் குதித்து தப்ப நினைத்தனர். காவலர்கள் திருடர்களை விடாமல் படகில் துரத்தினர்.
ஒரு திருடனை நடு ஆற்றிலேயே பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
மற்றொரு திருடனைப் பிடிக்கும் படி எதிர்கரையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு காவல் ஆய்வாளர் அமுதா கைபேசி வழி தகவல் கொடுத்தார்.
மறு கரையில் நின்றிருந்த மக்கள் இரண்டாவது திருடனை மடக்கிப் பிடித்தனர்.
சங்கிலியைப் பறிக்க முயன்ற வர்கள் சீர்காழியைச் சேர்ந்த ஜவஹர், 22, நாகையைச் சேர்ந்த கண்ணன், 27, என்பது தெரியவந்தது. இருவரையும் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமயோசிதமாகவும் துரிதமாகவும் செயல்பட்ட அமுதாவை காவல் அதிகாரிகளும் மக்களும் பாராட்டினர்.

