தாதியர் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தது; உறவினர்கள் சாலை மறியல்

2 mins read
efb7f2de-ba99-4a96-a92a-8db700e848a0
தாதியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததைக் கேட்டு ஆத்­தி­ரம் அடைந்த புஷ்­பா­வின் உற­வி­னர்­களும் கிரா­ம மக்களும் நேற்று காலை சூனாம்­பேடு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தின் முன்­பாக சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.படம்: தமிழக ஊடகம் -

மது­ராந்­த­கம்: காணொளி வழியாக மருத்துவர் ஒருவரின் அறிவுரை யைக் கேட்டு தாதியர் பிர­ச­வம் பார்த்ததில் குழந்தை உயி­ரி­ழந்­தது.

மதுராந்தகம் அருகே நடந்த இந்தச் சம்பவம் தொடர்பில் தாதியர் இருவர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

இல்லீடு அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் மருத்துவராகப் பணி­யாற்றி வந்த மருத்துவர் பாலுவை உட­ன­டி­யாக பணி­யிட மாற்­றம் செய்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

தாதியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயி­ரி­ழந்த செய்தி அந்தப் பகு­தி­யில் காட்­டுத்தீ போல பர­வி­யதை அடுத்து, கிராம மக்களும் உற­வி­னர்­களும் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­டனர்.

மது­ராந்­த­கம் காவல் அதி காரிகள் உள்ளிட்டோர், "தவறு செய்­த­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

செங்­கல்­பட்டு மாவட்­டம், ஆண்­டார் குப்­பம் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர் முரளி, 36. மின்சார ஆய்வாள ரான இவ­ரது மனைவி புஷ்பா, 33. நிறை­மாத கர்ப்­பிணி.

நேற்று முன்­தி­னம் புஷ்­பா­வுக்கு பிர­சவ வலி ஏற்­பட்­டதை அடுத்து, மது­ராந்­த­கம் அருகே உள்ள இல்­லீடு அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்த மருத்துவர் மருத்­துவ முகா­முக்குச் சென்றிருந்த நிலையில், பிரசவ வலி­யால் துடித்­த­ புஷ்பாவுக்கு மருத்துவர் இன்றி தாதியர்கள் பிர­ச­வம் பார்த்துள்ளனர்.

மற்­றொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி­யில் இருந்த மருத்துவரைக் காணொளி வழி தொடர்புகொண்டு அவர் கூறிய அறிவுரையின்படி தாதிகள் பிர­ச­வம் பார்த்­த­தாகத் தெரி­கிறது.

இந்நிலையில், குழந்­தை­யின் கால் பகுதி முதலில் வெளியே வரவே தாதியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தை பிறந்த சிறிது நேரத்­தில் இறந்துவிட்­டது.