கொவிட்-19, டெங்கியுடன் எச்1என்1 காய்ச்சல் பாதிப்பும் அதிகரிப்பு காய்ச்சலைத் தடுக்க 1,000 இடங்களில் மருத்துவ முகாம்

கொவிட்-19, டெங்கியுடன் எச்1என்1 காய்ச்சல் பாதிப்பும் அதிகரிப்பு காய்ச்சலைத் தடுக்க 1,000 இடங்களில் மருத்துவ முகாம்

2 mins read
2f730d45-c8b3-4e3f-9a03-b6a5d68f0289
-

சென்னை: தமி­ழ­கத்­தில் பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக கொவிட்-19, டெங்­கி, எச்1என்1 காய்ச்­ச­லால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

இந்தச் சூழலில், இவற்­றைத் தடுக்­கும் வகை­யில் 1,000 இடங்­களில் நேற்று காய்ச்­சல் முகாம்­கள் நடத்­தப்­பட்­டன.

இந்த முகாம்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளில் தேவைக்கேற்ப தொடர்ந்து நடைபெறும் என்­றும் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கூறியுள்­ள­னர்.

சளி, தலை­வலி, இரு­மல், காய்ச்­சல் இப்­படி எந்த அறி­கு­றி­கள் இருந்­தா­லும் முகாம்­க­ளில் பரி­சோ­தித்­துக் கொள்­ளும்படி­யும் அவர்கள் அறி­வு­றுத்தி உள்ள­னர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்­கும் மேலாக கொவிட் பாதிப்பு மக்­க­ளைப் பாடாய்ப்­ப­டுத்தி வந்த நிலை­யில், இப்­போது டெங்கி, எச்1என்1 காய்ச்­ச­லா­லும் பல­ர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் டெங்­கிக் காய்ச்­ச­லுக்கு 121 பேர் பாதிக்­கப்பட்­டுள்­ள­னர். அதேபோல், கொவிட்-19 கிருமித்தொற்றால் 500 பேர் என்ற அள­வில் தினமும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்றனர்.

அத்­து­டன் எச்1என்1 என்ற 'இன்­ஃப்ளுயன்சா வைரஸ்' வகை­யைச் சேர்ந்த பன்­றிக் காய்ச்­சல் கார­ண­மா­க­வும் தினமும் 200க்கும் மேலா­னோர் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், மருத்­துவ முகாம் களைத் தமி­ழக அரசு நேற்று முதல் நடத்­தத் தொடங்­கி­யுள்­ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பூவி­ருந்­த­வல்லி ஒன்­றி­யத்­துக்கு உட்­பட்ட கோலப்­பஞ்­சே­ரி­யில் காய்ச்­சல் தடுப்பு முகாமை மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தொடங்­கி­வைத்­தார்.

பின்­னர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "மாநி­லம் முழு­வ­தும் கடந்த ஜன­வரி மாதம் முதல் 1,166 பேர் எச்1என்1 காய்ச்­ச­லால் பாதிக்­கப்பட்­டுள்­ளனர்.

"தற்­போது 371 பேர் மருத்­துவ மனை­யில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 10 மாதங்­களில் 10 பேர் இக்காய்ச்­ச­லால் இறந்­துள்­ளனர்," என அவர் தெரி­வித்­தார்.

இது­கு­றித்து, சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், "பருவ கால மாற்­றம் ஏற்­ப­டும்­போது டெங்கி, பன்­றிக்­காய்ச்­சல் பாதிப்பு இருப்­பது இயல்­பா­னதே.

"கொரோ­னா­வு­டன், சாதா­ரண காய்ச்­சல், டெங்கி, பன்­றிக்­காய்ச்­ச­லும் இருப்­ப­தால் பர­வல் அதி­கமாக இருப்பதுபோல் தெரிகிறது.

"மொத்தமுள்ள எட்டு கோடி தமிழக மக்களில் ஒரு விழுக்காடு என்ற அள­வில்தான் காய்ச்­சல் பாதிப்பு உள்­ளது. எனவே, பொதுமக்­கள் அச்­சப்­பட வேண்­டாம். அதே­நே­ரம், சொந்தமாக சிகிச்சை மேற்­கொள்­ளா­மல் மருத்துவர்களின் ஆலோ­ச­னைப்­படி மருந்­து­களை உட்­கொள்ள வேண்­டும். காய்ச்­சல், சளி, இரு­மல் போன்ற பாதிப்­பு­கள் இருந்­தால் உட­ன­டி­யாக சிகிச்சை பெறவேண்­டும்," என்று அவர்­கள் அறிவுறுத்தி உள்ளனர்.