குடிநீர் குழாய் பதிப்பதற்காகத் தோண்டிய குழியில் சிக்கிய தனியார் பேருந்து

குடிநீர் குழாய் பதிப்பதற்காகத் தோண்டிய குழியில் சிக்கிய தனியார் பேருந்து

1 mins read
8ea81fd8-b435-4a6d-ad14-c71b944d2430
குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்தக் குழிக்குள் தனியார் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இந்தப் பேருந்தை பாரந்தூக்கி கொண்டு மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டது.படம்: தமிழக ஊடகம் -

கோவை: குடி­நீர் குழாய் பதிப்­ப­தற் காக தோண்­டப்­பட்ட குழிக்­குள் தனி­யார் பேருந்து ஒன்று நேற்று சிக்­கிக்கொண்­ட­தால் கோவை மாவட்­டத்­தில் உள்ள இடையார்­பாளை­யம் பகு­தி­யில் போக்குவரத்து பாதிக்­கப்­பட்­டது.

கோவை­யில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை­யி­லான பகு­தி­களில் குடி­நீர் குழாய் பதிக்­கும் பணி­கள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், இதற்­காக முக்­கிய நெடுஞ்­சா­லை­யான தடா­கம் பகுதியில் இரண்டு நாள்­க­ளுக்கு முன்பு பள்­ளம் தோண்­டப்­பட்டு குடி­நீர் குழாய்­கள் பதிக்­கப்­பட்­டன. ஆனால், அங்கு குழி­கள் இருப்­ப­தற்­கான எந்­த­வி­த­மான அறி­விப்­பும் அங்கு வைக்­கப்­ப­ட­வில்லை.

இது தெரி­யா­மல் அவ்­வ­ழியே வந்த தனி­யார் பேருந்து ஒன்று எதிர்­பா­ரா­த­வி­த­மாக குழிக்­குள் சிக்­கிக்­கொண்­டதை அடுத்து, அதில் இருந்த பய­ணி­கள் அனைவரையும் கீழே இறக்­கி­விட்டு பேருந்தை பாரந்­தூக்கி மூலம் மீட்­கும் பணி­கள் தீவி­ர­மாக நடைபெற்­றன.

கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக இச்சாலை மோச­மாக சேதமடைந்­தி­ருந்த நிலை­யில், தற்­போது குடி­நீர் குழாய் பணி­களும் நடைபெற்று வரு­வ­தால் பொது­மக்­கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.