சாதனை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றைக் காலுடன் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்

சாதனை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றைக் காலுடன் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்

1 mins read
297d7a86-c697-4bea-8e1b-2d861a9c6185
தினசரி 100 கி.மீ. மிதிவண்டி ஓட்டிய மகேஷ் (வலது). படம்: இணையம் -

நாகர்­கோ­வில்: கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் கணி­யா­கு­ளம் பாறை­யடி எனும் ஊரைச் சேர்ந்­த­வர் மகேஷ். 54 வய­தா­கும் இவர் ஒரு காலை இழந்­த­வர்.

இளை­யர்­க­ள் தன்­னம்­பிக்கை, மன உறுதி ஆகி­ய­வ பண்புகளுடன் வாழ்வில் முன்னேற முயலவேண்டும் என்பதை வலி­யு­றுத்தி, கன்­னி­யா­கு­ம­ரி­யில் இருந்து காஷ்­மீர் வரை விழிப்­பு­ணர்வு மிதிவண்டியில் பய­ணம் மேற்­கொண்­டார் மகேஷ்.

கன்­னி­யா­கு­மரி காந்தி மண்­ட­பத்­தில் இருந்து இவ­ரது சாதனைப் பய­ணத்தை மாந­க­ராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்­தார்.

அன்­றா­டம் சரா­ச­ரி­யாக 100 கிலோ­மீட்­டர் எனும் அள­வில் மிதிவண்டி ஓட்­டிய இவர் வெற்­றி­க­ர­மாக ஜம்மு சென்­ற­டைந்­தார். அதன்­பி­றகு ரயில் மூலம் நாகர்­கோ­வில் திரும்­பி­னார்.