திமுக ஆட்சிக்கு இன்னும் 44 அமாவாசைகளே பாக்கி இருக்கு: எடப்பாடி பழனிசாமி ஆருடம்

திமுக ஆட்சிக்கு இன்னும் 44 அமாவாசைகளே பாக்கி இருக்கு: எடப்பாடி பழனிசாமி ஆருடம்

2 mins read
6ca321b8-fa32-4927-b5e0-277fefbaac16
-

சென்னை: நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வர­வி­ருக்­கிறது. அதோட சட்­ட­ மன்றத் தேர்­த­லும் நடத்த வாய்ப்­புள்­ளதால் திமுக ஆட்­சிக்கு இன்­னும் 44 அமா­வா­சை­களே பாக்­கி­யி­ருக்கு என்று அதி­முக இடைக்­கால பொதுச் செய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.

சேலத்­தில் ஆட்­டை­யாம்­பட்டி பேருந்து நிலை­யம் அருகே நடை­பெற்ற பேர­றி­ஞர் அண்ணா பிறந்­த­நாள் விழா பொதுக்­கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு அவர் பேசி­னார்.

இடைக்­கால பொதுச் செய­லா­ள­ராக பதவி ஏற்ற பிறகு எடப்­பாடி பழ­னி­சாமி பங்­கேற்­கும் முதல் பொதுக்கூட்­டம் இது.

அவ­ருக்கு மாபெ­ரும் மாலை அணி­வித்து நிர்­வா­கி­கள் வர­வேற்­ற­னர்.

"பேர­றி­ஞர் அண்­ணா­வுக்கு பிறந்­த­நாள் விழா நடத்த தகு­தி­யான இயக்­கம் அதி­முக மட்­டும்­தான். ஏழை­யின் சிரிப்­பில் இறை­வனை காண்­போம் என்­றார் அண்ணா. அவர் எதி­லெல்­லாம் அக்­கறை செலுத்­தி­னாரோ அந்த வழி­யில் எம்.ஜி.ஆர். சத்­து­ணவு திட்­டம் கொண்டு வந்து சிறப்­பாக நடத்­தி­னார். எம்.ஜி.ஆர் செய்த சாத­னை­கள், நன்­மை­களை ஜெய­ல­லிதா நிறை­வேற்­றி­னார். நம்­மு­டைய தலை­வர்­கள் மக்­க­ளுக்­காக உழைத்­த­வர்­கள். உயி­ரோட்­ட­முள்ள திட்­டங்­க­ளின் மூலம் மறை­விற்குப் பின்­ன­ரும் மக்­க­ளின் மன­தில் அவர்கள் வாழ்ந்து வரு­கி­றார்­கள்" என்று பழனி­சாமி குறிப்­பிட்­டார்.

"முத­ல­மைச்­ச­ராக நான் இருந்­த­போது, அதி­க­மான போராட்­டங்­களை சந்­தித்­தேன். யார் போராட்­டம் நடத்­தி­னா­லும் அனு­மதி வழங்­கி­னோம். ஆனால் இப்­போது அப்­படி இல்லை.

"தற்­போது அதி­முக நடத்­திய ஒரு போராட்­டத்­திற்கே திமுக ஆட்சி பயந்து விட்­டது. மின்­கட்­டண உயர்வு போராட்­டத்­திற்கு அனு­மதி கொடுக்­கா­மல் ஸ்டா­லின் நடுங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார். கடந்த 10 ஆண்­டு­கா­ல­மாக அதி­முக ஆட்­சி­யில் எது­வும் செய்­ய­வில்லை என்று முழு பூச­ணிக்­காயை சோற்­றில் மறைக்க பார்க்­கி­றார் ஸ்டா­லின்.

"தமி­ழ­கத்­தில் திமுக ஆட்­சிக்கு வந்­தா­லும், சேலத்­தில் அதி­மு­க­தான் ஆட்­சி­யில் இருக்­கிறது. மொத்­த­முள்ள 11 தொகு­தி­களில் 10 தொகுதி­களில் அதி­முக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இருக்­கி­றார்­கள். சேலத்­திற்கு ஓர் அமைச்­சரை போட்­டி­ருக்­கி­றார்­கள். எந்­தத் திட்­ட­மும் கொண்டு வர­வில்லை. 44 அமா­வா­சை­கள்­தான் திமுக ஆட்­சிக்கு அவ­கா­சம் உள்­ளது. அது­கூட நடக்­காது. 2024ல் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லு­டன் சட்­டப்­பே­ர­வைக்­கும் தேர்­தல் நடக்க வாய்ப்­பி­ருக்­கிறது.

"என்னை டெம்­ப­ரரி தலை­வர் என்­கி­ன்றனர். கரு­ணா­நிதி இருக்­கும்­போது ஸ்டா­லின்­தான் டெம்­ப­ரரி தலை­வ­ராக இருந்­தார். எங்­களை குறைசொல்ல ஸ்டா­லி­னுக்கு தகுதி கிடை­யாது," என்று பழ­னி­சாமி மேலும் தெரி­வித்­தார்.