சென்னை: சென்னையில் சளிக்காய்ச்சல் பரவுவதால் சிகிச்சை முகாம்களும் அதிகரிக்கப்படுகின்றன. மேலும் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 'இன்புளூயன்சா' காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் 6,860 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 1,798 பேர் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தனர். அவர்களுக்கு 'பாரசிட மால்' வலி மாத்திரை வழங்கப்பட்டது. இந்த நிலையில் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளதால் சென்னையில் நேற்று கூடுதலான மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி ஏற்பாடு செய்தது. எல்லா முகாம் களிலும் மருத்துவர்கள், தாதியர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப் பட்டது. பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது உறுதியானால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர். இந்த சாதாரண காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கான அறிகுறிகளே காணப்படுகிறது. எனவே தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

