'கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை'

1 mins read
688c10bc-5374-4dda-9088-aab910e6ac40
-

புது­டெல்லி: கன­டா­வில் வசிக்­கும் இந்­தி­யர்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­படி இந்­திய அரசு அறி வுறுத்­தி­யுள்­ளது.

அண்­மை­யில் வெறுப்­பு­ணர்வுத் தாக்­கு­தல், இந்­தி­யர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் அங்கு அதி­க­ரித்­துள்­ளன.

இத­னால் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும் என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்சு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது. கன­டா­வில் உள்ள தூத­ர­கங்­க­ளுக்கு இது தொடர்­பாக சுற்­ற­றிக்கை ஒன்­றை­யும் அமைச்சு அனுப்­பி­யுள்­ளது.

வெறுப்­பு­ணர்வுத் தாக்­கு­தல் சம்­ப­வங்­களை விசா­ரித்து தகுந்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கனடா அர­சாங்­கத்தை இந்­தியா கேட்­டுக் கொண்­டுள்­ளது.

இது­வரை குற்­றச்­செ­ய­லில் ஈடு­பட்­ட­வர்­கள் நீதிக்கு முன் நிறுத்­தப்­ப­டா­த­தை­யும் அது சுட்­டிக்­காட்­டி­யது. "குற்­றச்­செ­யல் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தால் இந்­தி­யா­வி­லி­ருந்து சுற்­றுலா அல்­லது கல்­விக்­காக கனடா செல்­லும், சென்­றுள்ள இந்­தி­யர்­கள் விழிப்­பு­ட­னும் எச்­ச­ரிக்­கை­யு­ட­னும் இருக்க வேண்­டும்," என்று சுற்­ற­றிக்கை தெரி­வித்­தது.

இந்­திய குடி­மக்­கள் மற்­றும் மாண­வர்­களை ஒட்­டா­வா­வில் உள்ள இந்­திய உயர் ஆணை­ய­ர­கம் அல்­லது டொராண்டோ மற்­றும் வான்­கூ­வ­ர் இந்திய தூத­ர­கங்­களில் பதிவு செய்­ய அர­சாங்­கம் வேண்­டு ­கோள் விடுத்­துள்­ளது.

இந்­திய உயர் ஆணை­ய­ர­கம் மற்­றும் தூத­ர­கங்­கள் கன­டா­வில் உள்ள இந்­திய குடிமக்களுடன் தொடர்­பில் இருப்­ப­தை­யும் ஏதே­னும் அவ­ச­ர­நிலை ஏற்­பட்­டால் அவர்­களை அணு­கு­வ­தை­யும் இது எளி­தாக்­கும் என்று வெளி­யு­றவு அமைச்சு தெரிவித்தது.