சென்னை: எய்ம்ஸ் கட்டடத்தைக் காணவில்லை என்று விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூரும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பா,ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 விழுக்காடு முடிந்துவிட்டது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 95 விழுக்காடு பணி முடிந்த எய்ம்ஸ் கட்டடத்தை யாரோ திருடி விட்டார்கள் என்று எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இது குறித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், " மதுரை எய்ம்ஸ் பணிகளை 95 விழுக்காடு முடித்த ஜே.பி. நட்டாவிற்கு நன்றி. நானும், மதுரை எம்.பியும் தோப்பூரில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டடத்தை யாரோ திருடிவிட்டார்கள்," என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

