சென்னையில் வீட்டு வாடகை திடீர் உயர்வு

சென்னையில் வீட்டு வாடகை திடீர் உயர்வு

2 mins read
470168f1-7137-4e03-b19c-b67b36e96ab2
-

சென்னை: கடந்த சில மாதங்­க­ளாக சென்­னை­யில் வீட்டு வாடகை கணி­ச­மாக அதி­க­ரித்து வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கொரோனா நெருக்­க­டிக்­குப் பிறகு, பொது­மக்­கள் இயல்­பு­நிலைக்கு மெல்ல திரும்பி வரும் நிலை­யில், சென்னை, திருச்சி, மதுரை உள்­ளிட்ட நக­ரங்­களில் வாட­கைக்கு வீடு கிடைப்­ப­தி­லும் பல்­வேறு சிர­மங்­கள் நில­வு­வ­தாக மக்­கள் மத்­தி­யில் பேசப்­ப­டு­கிறது.

கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் கார­ண­மாக சென்னை உள்­ளிட்ட நக­ரங்­களில் தங்­கி­யி­ருந்து வேலை பார்த்து வந்த ஏரா­ள­மா­னோர் சொந்த ஊருக்­குத் திரும்­பி­விட்­ட­னர். மேலும், பலர் ஊதி­யம் குறைக்­கப்­பட்­ட­தால் பொரு­ளி­யல் நெருக்­க­டிக்கு ஆட்­பட்டு குறைந்த வாடகை உள்ள வீடு­க­ளுக்கு மாறி­னர்.

தனி­யாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்­த­வர்­கள், இரண்டு அல்­லது மூன்று நண்­பர்­க­ளு­டன் வீட்­டைப் பகிர்ந்­து­கொள்­ளும் முறைக்கு மாறி­னர்.

இந்­நி­லை­யில், கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் குறைந்­ததை அடுத்து, அனைத்து வர்த்­தக, தொழில், சமூக நட­வ­டிக்­கை­கள் கிட்­டத்­தட்ட முழு இயல்­பு­நிலைக்குத் திரும்­பி­யுள்­ளன.

இந்­நி­லை­யில், தமி­ழக அரசு அண்­மை­யில் மின் கட்­டண உயர்வை அறி­வித்­துள்­ளது.

இத­னால் பெரும்­பா­லோ­ருக்கு அதிக பாதிப்பு இருக்­காது என்று அர­சுத் தரப்­பில் சமா­தா­னம் கூறப்­பட்ட நிலை­யில், வாட­கைக்கு குடி­யி­ருப்­போ­ருக்கு மேலும் ஒரு அதிர்ச்­சி­யாக வீட்டு உரி­மை­யா­ளர்­கள் வாட­கையை கணி­ச­மாக உயர்த்தி வரு­கின்­ற­னர்.

குறைந்­த­பட்­சம், பத்து முதல் இரு­பது விழுக்­காடு வரை வாடகை உயர்த்­தப்­பட்­டுள்­ள­தாக சென்­னை­யில் வாடகை வீட்­டில் குடி­யி­ருப்­போர் தெரி­விக்­கின்­ற­னர்.

அண்ணா நகர் உள்­ளிட்ட வசதி படைத்­தோர் அதி­கம் குடி­யி­ருக்­கும் பகு­தி­களில் சாதா­ரண வீடு­கள் முதற்­கொண்டு பங்­களா வீடு­கள் வரை அனைத்­துக்­கும் வாடகை உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

இத­னால் நடுத்­த­ரக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

வாடகை உயர்வை ஏற்­றுக்­கொள்ள மறுப்­ப­வர்­களும் வாடகை செலுத்த முடி­யா­த­வர்­களும் வீட்­டைக் காலி செய்ய வேண்­டும் என்ற நெருக்­க­டிக்கு ஆளா­கின்­ற­னர்.

இதே­போல் மதுரை, திருச்சி, கோவை உள்­ளிட்ட நக­ரங்­க­ளி­லும் வாடகை உயர்வு நடுத்­தர, ஏழை மக்­களை வாட்­டத் தொடங்கி­ உள்ளது.