கடப்பிதழ் முறைகேடு: 41 பேருக்குத் தொடர்பு

கடப்பிதழ் முறைகேடு: 41 பேருக்குத் தொடர்பு

1 mins read
d8340a0f-665b-49ed-a401-728f2ed0de78
-

மதுரை: போலி கடப்­பி­தழ் முறை­கேட்­டில் 41 பேருக்குத் தொடர்பு உள்­ள­தாக தமி­ழக அரசு மதுரை உயர் நீதி­மன்­றக் கிளை­யில் தெரி­வித்­துள்­ளது.

மது­ரை­யில் ஏரா­ள­மா­ன­வர்­க­ளுக்கு போலி கடப்­பி­தழ் வழங்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்க உத்­த­ர­வி­டக்­கோ­ரி­யும் மது­ரை­யைச் சேர்ந்த வழக்­க­றி­ஞர் முருக கணே­சன் என்­ப­வர் உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­தார்.

அனைத்து போலி கடப்­பி­தழ்­க­ளை­யும் ரத்து செய்ய வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி இருந்­தார்.

இந்த முறை­கேட்­டில் காவல்­துறை உய­ர­தி­கா­ரிக்குத் தொடர்­புள்­ள­தாக தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை குற்­றம்­சாட்­டி­யதை அடுத்து, இந்த விவ­கா­ரம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் தொடங்கி, ஜூன் மாதத்­துக்­குள் மதுரை மாவட்­டத்­தில் அவ­னி­யா­பு­ரம் காவல் நிலைய எல்­லைக்கு உட்­பட்ட பகு­தி­யில் மட்­டும் 53 போலி கடப்­பி­தழ்­கள் வழங்­கப்­பட்­ட­தா­க­வும் இதற்­காக போலி ஆவ­ணங்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­ட­தா­க­வும் வழக்­க­றி­ஞர் முருக கணே­சன் தெரி­வித்­துள்­ளார்.

இந்த முறை­கேட்­டின் மூலம் இலங்கை அக­தி­கள் பலர் கடப்­பி­தழ் பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், போலி கடப்பிதழ் முறை­கேட்­டில் 41 பேருக்குத் தொடர்பு உள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் அரசு தரப்பு வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டுள்­ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.