அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என டிஜிபி எச்சரிக்கை

அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என டிஜிபி எச்சரிக்கை

2 mins read
b8ded832-0787-4dcf-8d48-e6b88aa94d1f
பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் படையினர். படம்: ஊடகம் -

சென்னை: பொது அமை­திக்கு குந்­த­கம் விளை­விப்­போர் தேசிய பாது­காப்பு சட்­டத்­தில் கைது செய்­யப்­ப­டு­வர் என டிஜிபி சைலேந்­தி­ர­பாபு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படும் குற்­ற­வா­ளி­கள் மீது தேசிய பாது­காப்புச் சட்டம் பாயும் என எச்­ச­ரிக்­கப்­ப­டு­கிறது என அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா என்ற இஸ்­லா­மிய அமைப்­பு­டன் தொடர்புடைய இடங்­களில் தேசி­ய புல­னாய்வு முகமை அதி­ர­டிச் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது. அச்­ச­ம­யம் பத்து பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்த அமைப்பு பயங்­க­ர­வாதச் செயல்­களில் ஈடு­பட ஆள் சேர்ப்­ப­தாக புகார் எழுந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அம­லாக்­கத்­து­றை­யும் இந்த அமைப்பு தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது. இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்­துள்ள இஸ்­லா­மிய மத அமைப்­பு­கள் பல்­வேறு போராட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

இதை­ய­டுத்து, தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் பாஜக அலு­வ­ல­கங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் அக்­கட்சி நிர்­வா­கி­கள் தாக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன. மேலும் இந்து மத அமைப்­பு­க­ளின் நிர்­வா­கி­கள் குறி­வைத்­தும் தாக்­கு­தல் சம்­ப­வங்­கள் அரங்­கேறி வரு­கின்­றன.

கோவை, சேலம், மதுரை, கன்­னி­யா­கு­மரி உள்­பட பல மாவட்­டங்­களில் பாஜக, ஆர்­எஸ்­எஸ் அமைப்­பைச் சேர்ந்த நிர்­வா­கி­க­ளின் வீடு­கள் மீது பெட்­ரோல் குண்டு வீசப்­பட்­ட­தால் பதற்­றம் நிலவி வரு­கிறது.

கடந்த சில தினங்­க­ளாக இத்­த­கைய வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வதை அடுத்து, காவல்­துறை அதி­கா­ரி­க­ளு­டன் தலை­மைச் செய­லா­ளர் அவ­சர ஆலோ­சனை நடத்தி உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அப்­போது, சம்­ப­வத்­தில் ஈடுபட்­ட­வர்­களைப் பிடிக்க எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து கேட்­ட­றிந்த தலை­மைச் செய­லர், தொடர்ந்து இது­போன்ற சம்­ப­வங்­கள் தொட­ரா­மல் இருக்­க­வும் அமை­தியை ஏற்­ப­டுத்­த­வும் பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்­கி­ய­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே, பாஜக அலு­வ­ல­கங்­கள், நிர்­வா­கி­க­ளின் வீடு­கள் மீது நடத்­தப்­படும் தாக்­கு­தல்­க­ளைத் தடுக்க வேண்­டும் என்­றும் உரிய பாது­காப்பு அளிக்­கப்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி, காவல்­துறை தலை­வர் சைலேந்­திர பாபு­வி­டம் அக்­கட்­சி­யி­னர் மனு அளித்­துள்­ள­னர்.

இந்நிலையில், தமிழகத்தில் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழகம் முழுவதும் பாஜக, அதன் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ள அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

வகுப்புவாத சக்திகளுக்குத் துணைபோகும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகளை எல்லாம் ஆதாரங்களுடன் ஆவண விளக்கங்களுடன் சுட்டிக்காட்டி அமித் ஷாவுக்கு அனுப்பி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

இந்­நி­லை­யில், பாப்­பு­லர் ஃப்ரண்ட் ஆஃப் இந்­தியா தொடர்­பான இடங்­களில் தேசி­ய புலனாய்வு முகமை சோதனை நடத்­திய விவ­கா­ரத்­தில் ஜன­நா­யக ரீதி­யாக சட்­டப் போராட்­டங்­களில் ஈடு­பட உள்­ள­தாக தமிழ்­நாடு இஸ்­லா­மிய இயக்­கங்­கள், அர­சி­யல் கட்­சி­க­ளின் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய கூட்­ட­மைப்­பின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் மவு­லானா முக­மது மன்­சூர் காஸிமி, சோதனை என்ற பெய­ரில் தேசி­யப் புல­னாய்வு முகமை அடக்­கு­மு­றை­யைக் கட்­ட­விழ்த்­து­விட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டி­னார்.