தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் பயணத்தில் கத்தி, அரிவாள்: மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை கடும் எச்சரிக்கை

1 mins read
fd68537d-c452-4154-9aec-c13b199c0b0a
-

கோவை: கடந்த சில தினங்­க­ளாக ரயில் நிலை­யங்­களில் கல்­லூரி மாண­வர்­கள் சட்­ட­வி­ரோ­த­மான செயல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக ரயில்வே காவல்­துறை கண்­காணிப்­பா­ளர் அதி­வீர பாண்­டி­யன் தெரி­வித்­தள்­ளார்.

ரயில் பய­ணத்­தின்­போது கத்தி, அரி­வாள் போன்ற ஆயு­தங்­களைக் கொண்டு வரும் மாண­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரித்­துள்­ளார்.

"மாண­வர்­க­ளது வாழ்க்கை அவ­ர­வர் கைக­ளில்­தான் உள்­ளது. காணொ­ளிப் பதி­வு­க­ளுக்­காக ரயில் கூரை­கள் மேல் ஏறு­வது, ரயில் படிக்­கட்­டு­களில் தொங்­கி­ய­படி பய­ணம் செய்­வது, கத்தி, அரி­வாள் போன்ற பொருள்­க­ளைக் கொண்டு நடை­மேடை­களில் விப­ரீத சாக­சம் செய்­வது போன்ற செயல்­களில் சிலர் ஈடு­ப­டு­கின்­ற­னர். இவை அனைத்­தும் சட்­டப்­படி குற்­றம்," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அதி­வீர பாண்­டி­யன் தெரி­வித்­தார்.

பெற்­றோர் பாடு­பட்டு படிக்க வைப்­பதை மாண­வர்­கள் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் என்றும் இது­போன்ற சம்­ப­வங்­களில் ஈடுபடக்­கூ­டாது என்­றும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.

சட்­ட­வி­ரோ­தச் செயல்­களில் ஈடு­படும் மாண­வர்­கள் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், மாண­வர்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் தொடர் ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

தமி­ழக அர­சால் தடை செய்­யப்­பட்ட பொருள்­கள், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்­க­ளைக் கொண்டு செல்­வோர் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் சந்­தே­கத்­துக்­கு­ரிய பய­ணி­கள் மோப்ப நாய்­க­ளின் உத­வி­யு­டன் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் அதி­வீர பாண்­டி­யன் மேலும் தெரி­வித்­தார்.