சென்னை: மழைக்காலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து கம்பிகள் அறுந்து விழுவதும் அவற்றைத் தவறுதலாக யாரேனும் மிதிக்கும் போது மின்சாரம் தாக்கி உயி ரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க 376,000 'டிரான்ஸ்பார்மர்'களில் நவீன சாதனங்களைப் பொறுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட செலவு 5,800 கோடி ரூபாய் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
மின்கம்பி அறுந்து விழும் போது, நவீன சாதனங்கள் தானாகவே செயல்பட்டு, 'டிரான்ஸ்பார்மரில்' இருந்து மின்சாரம் வருவதை உடனே துண்டிக்கும். இதனால் மின்சாரம் பாய்ந்து, உயிரிழப்பது ஏற்படாது. உடனே கட்டுப்பாட்டு அறையில் அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கும்.
அத்துடன், பாதிக்கப்பட்ட வர்கள் உள்ள இடத்தையும் காட்டும் என்பதால், ஊழியர்கள் விரைந்து வந்து சேதமடைந்த மின்கம்பியைச் சீரமைக்க முடியும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசிடம் மின்வாரியம் ஒப்புதல் கேட்டுள்ளது.

