15 பேர் சிறையிலடைப்பு; போத்தலில் பெட்ரோல், டீசல் விற்க தடை; தலைவர்கள் கண்டனம் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: 20,000 காவலர்கள் குவிப்பு

15 பேர் சிறையிலடைப்பு; போத்தலில் பெட்ரோல், டீசல் விற்க தடை; தலைவர்கள் கண்டனம் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: 20,000 காவலர்கள் குவிப்பு

2 mins read
e38add5a-239a-4dc6-8c1e-b0ac5876f236
-

ஈரோடு: தமி­ழ­கத்­தில் பெட்­ரோல் குண்டு வீசப்­பட்ட சம்­ப­வங்கள் தொடர்­பில் மேலும் நான்கு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­க­ளை­யும் சேர்த்து இது வரை 15 பேர் சிறை­யில் அடைக் கப்­பட்­டுள்­ள­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

அத்துடன், மாநி­லம் முழு­வ­தும் கேன்­க­ளி­லும் போத்­தல்­க­ளி­லும் பெட்­ரோல், டீசல் விற்­பனை செய்ய வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிசி­டிவி காட்­சி­களை வைத்து பல பேரி­டமும் விசா­ரணை நடத்தப் பட்டு வரும் நிலையில், மக்களிடம் அச்சமும் பதற்றமும் நிலவுவதால் தென் மண்டலங்­களில் 20,000 காவ­லர்­கள் பாதுகாப்­புப் பணி­யில் ஈடு­படுத்­தப்­பட்டுள்ளனர் என்று தெண் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் கூறி­யுள்­ளார்.

கடந்த 22ஆம் தேதி கோவையில் உள்ள பாஜக அலு­வ­ல­கத்­தில் பெட்­ரோல் குண்டு வீசப்­பட்­டது.

இதைத்­தொ­டர்ந்து, பாஜக, ஆர்­எஸ்­எஸ் பிர­மு­கர்­க­ளின் வீடு­கள், கடை­கள் என பல்­வேறு இடங்­களில் பெட்­ரோல் குண்­டு­கள் வீசப்­பட்­டன.

மேட்­டுப்­பா­ளை­யம், பொள்­ளாச்சி, ஈரோடு என அடுத்­த­டுத்து ஒன்­பது இடங்­களில் பெட்­ரோல் குண்­டு­கள் வீசப்­பட்­டதை அடுத்து, மேற்கு மண்­ட­லம் முழு­வ­தும் காவல்­துறையின் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டுவரப்­பட்­டது.

இந்­நி­லை­யில், ஈரோட்­டில் பாஜக பிர­மு­கர் கடை­யில் பெட்­ரோல் குண்டு வீசப்­பட்ட விவ­கா­ரத்­தில் நால்­வர் கைது செய்­யப்­பட்­டுள்ள தாக மேற்கு மண்­டல காவல்­துறைத் தலை­வர் சுதா­கர் தெரி­வித்­தார்.

இந்தச் சம்­ப­வங்களுக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்ள மாநில அர­சி­யல் தலை­வர்­கள், கல­வ­ரங்­க­ளைத் தூண்­டி­வி­டும் மத­வாத சக்­தி­களை இரும்­புக்­க­ரம் கொண்டு ஒடுக்­க­வேண்­டும் என்று அரசை வலி­யுத்தி உள்­ள­னர்.

"காவல்­து­றை­யினர் ஆங்­காங்கே கைது நட­வ­டிக்­கையை முடுக்­கி­வி­டத் துவங்கி உள்­ள­னர். இதனை கூடு­தல் வேகத்துடன் செய்­ய­வேண்­டும். அப்போதுதான் அடுத்­த­டுத்த குற்­றங்­களைத் தடுக்­க­மு­டி­யும்," என்று பாஜக மாநி­லத் தலை­வர் அண்ணாமலை தெரி­வித்­துள்­ளார்.

ஆனால், இந்தச் சம்­ப­வங்­களின் பின்னணி­யில் பாஜ­க­வும் ஆர்­எஸ்­எஸ் அமைப்­பும் இருக்­க­லாம் என்று விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் தொல் திரு­மா­வ­ள­வன் சந்­தே­கம் எழுப்­பி­யுள்­ளார்.

"தமிழ்நாட்டில் பத்து மாவட் டங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் பரவி வருவது பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. இந்தக் கலாசாரத்துக்கு அரசு விரைந்து முடிவுகட்ட வேண்டும்," என பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளார்.

"ஒரே சமயத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந் திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையைப் பாா்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டாா்கள்.

"அமைதிப் பூங்கா என்று பெய ரெடுத்த தமிழகத்தை வெடிகுண்டு கலவரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்," என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.