தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணிப்பெண்ணான தாய்க்கு தங்கம், மகளுக்கு வெண்கலப் பதக்கம்

2 mins read
a10ef4a8-25a4-4dc4-a56d-7676cf1d358e
பதக்கத்துடன் தாய் மாசிலா மணி, மகள் தாரணி. அருகில் பயிற்றுவிப் பாளர்கள்.தனக்கு அரசு வேலை வழங்கி உதவினால், இன்­னும் பல சாத­னை­களைச் செய்ய காத்­தி­ருப்­ப­தாகக் கூறுகிறார் மாசி­லா­மணி.படம்: ஊடகம் -

திருச்சி: திருச்­சி­யில் நடை­பெற்ற மாநில அள­வி­லான பளு தூக்­கும் போட்­டி­யில், பல வீடு­க­ளி­லும் பணிப்­பெண்­ணாக வேலை பார்த்து சொற்ப சம்­ப­ளம் ஈட்­டும் மாசி லாமணி என்ற பெண் தங்­கப் பதக்­கம் வென்­றுள்­ளார்.

அவர், தன் மக­ளுக்­கும் பயிற்சி அளித்து வெண்­க­லப் பதக்­கத்தை வெல்ல வைத்­துள்­ளார்.

தாய் மாசி­லா­மணி 63 கிலோ எடைப் பிரி­வில் தங்­கத்­தை­யும் மகள் தாரணி 47 கிலோ எடைப்­பி­ரி­வில் வெண்­க­லத்­தை­யும் வென்­றுள்­ள­னர்.

கோவை மாவட்­டம், குணிய முத்­தூ­ரைச் சார்ந்­த­வர் ரமேஷ். இவ­ரது மனைவி மாசி­லா­மணி, மகள் தாரணி. 11ஆம் வகுப்­பில் படித்து வரு­கி­றார்.

மாசிலாமணி, கோவைப் புதூ­ரில் உள்ள சில வீடுகளில் மாதம் ரூ.4,000க்கு வீட்டு வேலை செய்து வரும் நிலையில், உடல் பரு­ம­னாக இருப்­ப­தால், உடற்­ப­யிற்சி செய்­யும்­படி அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து, குடும்­பத்­தி­ன­ரின் எதிர்ப்­புக்கு இடையே மாசி­லா­மணி உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்­குச் சென்­றுள்­ளார்.

அங்கு மற்­ற­வர்­கள் எடை தூக்கு வதைப் பார்த்து ஆர்­வம் கொண்ட வர், தானும் போட்­டி­யில் கலந்து கொள்ள விருப்­பம் தெரி­வித்­தார்.

உடற்­ப­யிற்­சிக் கூடத்­தின் உரி­மை­யா­ள­ரும், தேசிய அள­வில் பல பதக்­கங்­க­ளைப் பெற்­ற­வ­ரும், பயிற்றுவிப்பாளரு­மான சிவக்­கு­மார், மாசி­லா­ம­ணி­க்கு இல­வ­ச­மாகப் பயிற்சி அளித்­துள்­ளார்.

தாயைப் பார்த்து தார­ணியும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டார்.

கடும் பயிற்­சி­யின் பலனாக திருச்­சி­யில் நடை­பெற்ற மாநில அள­வி­லான பளு தூக்­கும் போட்டி யில் தாயும் மகளும் பதக்­கங்­களை வென்­றுள்­ள­னர்.

இதைத்­தொ­டர்ந்து கடந்த வாரம் சென்­னை­யில் நடை­பெற்ற தேசி­ய­ அள­வி­லான பளு தூக்கும் போட்­டி­யில் தாரணி இரண்­டாம் இடம்­பி­டித்து வெள்­ளிப் பதக்­கமும் வென்றுள்ளார்.