சென்னை: அண்மையில் நடந்த கலவரத்தின்போது ஓபிஎஸ் தரப்பினரால் அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக புகார்அளிக்கப்பட்ட நிலையில், திருட்டுப் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுவிட்டதாக சிபிசிஐடி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
"திருட்டுப் போன 113 ஆவணங் களையும் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன," என்று சிபிசிஐடி காவலர்கள் கூறியுள்ளனர்.
அதிமுகவில் நெடுநாள்களாகவே இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினரிடம் ஒற்றைத் தலைமை குறித்து மோதல் போக்கு நீடித்து வந்தது.
ஒற்றைத் தலைமையே தேவை என இபிஎஸ் தரப்பினரும் இரட் டைத் தலைமையே கட்சி வளர்ச்சிக்கு உகந்தது என ஓபிஎஸ் தரப்பினரும் பிடிவாதம் பிடித்தனர்.
இந்நிலையில், அதிமுகவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக இபிஎஸ்சை தேர்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது.
அப்போது, சென்னை ராயப்பேட் டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வமும் அவ ரது ஆதரவாளர்களும் வந்தனர்.
அலுவலகப் பூட்டை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்ததை அடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் வெடித்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கலவரத்தை தணிக்கும் வகை யில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்தை பூட்டி முத்திரை வைத்தனர்.
இந்நிலையில், வெள்ளிவேல் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள், முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றுவிட்டதாக ஓபிஎஸ் தரப்பினர் மீது இபிஎஸ் தரப்பினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, ஓபிஎஸ் உள்பட 60 பேர் மீது வழக்குப் பதிவானது. இதுதொடர்பாக சிபிசிஐடி காவ லர்கள் ஆய்வு செய்ததில் வெள்ளி வேல் அதிமுக அலுவலகத்தில் இருப்பது தெரியவந்தது.
இதனிடையே நேற்று இரண் டாவது முறையாக பழனிசாமி தலைமை அலுவலகம் சென்று, அங்கு நடைபெறும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டடார்.

