குமரி அனந்தனுக்கு வீடு வழங்கிய ஸ்டாலின்

1 mins read
aa7bc06b-cb70-46c3-a30d-86ee0bb794a9
-

சென்னை: காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும் தெலுங்­கானா ஆளு­நரும் யூனி­யன் பிர­தே­ச­மான புது­வை­யின் துணைநிலை ஆளு­ந­ரு­மான தமி­ழிசை சவுந்­த­ர­ரா­ஜ­னின் தந்­தை­யு­மான குமரி அனந்­த­னுக்கு தமிழக அர­சின் சார்­பில் சென்னை அண்ணா நக­ரில் வீடு வழங்­கப் பட்­டி­ருக்­கிறது.

தனக்கு அர­சின் சார்­பில் வீடு வழங்­க­வேண்­டும் என்று குமரி அனந்­தன் கோரிக்கை விடுத்­ததை அடுத்து, வீடு வழங்குவதற்கான ஆணையை தலைமைச் செய­ல­கத்­தில் குமரி அனந்தனிடம் முதல்­வர் ஸ்டா­லின் நேரில் வழங்கினார்.

இது­கு­றித்து அரசு வெளியிட்­டுள்ள அறிக்­கை­யில், இலக்­கி­யச் செல்­வர் குமரி அனந்­தன், பெருந்­தலை­வர் காமராஜ­ரின் சீடர். காங்­கி­ரஸ் பேரி­யக்­கத்­தின் மூத்த தலை­வர். மக்­கள் நல­னுக்­காக 17 முறை மாநிலம் முழு­வ­தும் நடைப்­ப­ய­ணம் மேற்­கொண்டு இருக்­கி­றார்.

தமி­ழுக்­கும் தமிழ்­நாட்­டிற்­கும் தன் வாழ்­நாள் முழுவதும் பெருமை சேர்த்து வரும் குமரி அனந்­தன் தான் வாழ்­வ­தற்கு வச­தி­யாக அர­சின் சார்­பில் வீடு வழங்­கிடவேண்­டு­ம் என கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். அதன்படி, சென்னை அண்­ணா­ந­கர் கோட்­டத்­தில் அமைந்­துள்ள, தமிழ்­நாடு வீட்டு வசதி வாரி­யத்­தின் உயர் வரு­வாய்க் குடி­யி­ருப்­பில் வீடு வழங்கி உத்­த­ர­விடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.