இணைய ரம்மியை தடை செய்ய அவசர சட்டத்துக்கு ஒப்புதல்

இணைய ரம்மியை தடை செய்ய அவசர சட்டத்துக்கு ஒப்புதல்

2 mins read
7085efcf-e796-472c-9e38-cd1652fa8737
-

சென்னை: இணைய ரம்மி சூதாட்­டத்­திற்கு தடை விதிக்­கும் அவ­ச­ரச் சட்­டத்­திற்கு தமி­ழக அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

ஆளு­ந­ரின் ஒப்­பு­த­லைப் பெற்ற வுடன் இந்த அவ­ச­ரச் சட்­டம் விரை­வில் நடை­மு­றைக்கு வரும் என உள்­து­றைச் செய­லர் பணீந்­தர் ரெட்டி தெரி­வித்­துள்­ளார்.

மாநி­லத்­தில் இணைய ரம்மி சூதாட்­டத்­தால் பணத்தை இழந்து உயிரை மாய்த்­துக்­கொண்­ட­வர்­கள் அதி­க­ரித்து வந்த நிலை­யில், இந்த விளை­யாட்­டைத் தடை செய்­யும் படி பல்­வேறு தரப்­பைச் சேர்ந்த மக்­களும் வலி­யு­றுத்தி வந்­த­னர்.

இதை­ய­டுத்து, இணை­ய­வழி சூதாட்­டங்­க­ளைத் தடுப்­ப­தற்கு ஏது­வாக, புதிய சட்­டத்தை இயற்­றும் வகை­யில் அர­சுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கா­கச் சென்னை உயர் நீதி­மன்ற ஓய்­வு­பெற்ற நீதி­பதி கே.சந்­துரு தலை­மை­யில் அரசு ஒரு குழுவை அமைத்­தது.

மருத்­து­வர்­கள், உள­வி­ய­லா­ளர், காவல்­துறை கூடு­தல் இயக்­கு­நர் ஆகி­யோர் கொண்ட குழு­வி­னர் கடந்த ஜூன் மாதம் அர­சி­டம் அறிக்கை ஒன்றை அளித்த நிலை­யில், பொது­மக்­க­ளி­ட­மும் கருத்­து­கள் கேட்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து, சட்­டத்­து­றை­யின் ஆலோ­ச­னை­யு­டன் ஒரு அவ­ச­ரச் சட்­டம் தயா­ரிக்­கப்­பட்டு, சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் பரி­சீ­லிக்­கப்­பட்டு அதற்கு ஒப்­பு­த­லும் அளிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இந்த அவ­சர சட்டத்­திற்கு ஆளு­ந­ரின் ஒப்­பு­தல் பெறப்­பட்டு, விரை­வில் இணைய ரம்மி விளை­யாட்­டுக்குத் தடை விதிக்­கப்­படும் என அர­சின் செய்­திக் குறிப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

ரம்­மி தடைக்கு அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்ள ஒப்­பு­தலை பாட்­டாளி மக்­கள் கட்சி வர­வேற்றுள்­ளது.

"தமி­ழ­கத்­தில் இணைய சூதாட்­டம் கார­ண­மாக 80க்கும் மேற்­பட்­டோர் உயிரை மாய்த்­துக்­கொண்­டுள்ள நிலை­யில், அவ­சர சட்­டத்­தைக் கொண்டு வந்­துள்ள தமி­ழக அரசை மன­தா­ரப் பாராட்­டு­கி­றேன்," என டுவிட்­டர் பதி­வில் அக்­கட்­சி­யின் நிறு­வ­னர் மருத்­து­வர் ராம­தாஸ் குறிப்­பிட்­டுள்­ளார்.