ஆம்பூர்: ஆம்பூர் அருகே காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென மூண்ட தீ விபத்தில், ரூ.5 கோடி மதிப்பிலான காலணிகளும் தோலால் ஆன உதிரிப் பாகங்களும் எரிந்து தீக்கிரையாகின.
விசாரணையில், மின்கசிவு கார ணமாக இத்தீவிபத்து ஏற்பட்டி ருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருள்களும் தீயில் எரிந்து நாசமானதால், அப்பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது. இதனால், கிராம மக்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி அவதிப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த சின்ன வரிக்கம் பகுதியில் உள்ள காலணித் தொழிற்சாலையில் 3,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இத்தொழிற்சாலை கிடங்கில் தீப்பற்றியது.
இதனைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
கிடங்கு முழுவதும் விரைந்து பரவிய தீயை அணைக்கும் பணியில் ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆலங் காயம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 17 தீயணைப்பு வாகனங்களும் 50க்கும் மேலான வீரர்களும் ஈடுபட்டனர்.
12 மணி நேரமாகப் போராடி நேற்று காலையில்தான் தீ அணைக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23 முதல் 28ஆம் தேதிவரை இந்த தொழிற்சாலைக்குச் சொந்தமான 15க்கும் மேற்பட்ட காலணி, தோல் தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

