சுற்றுலா தின விழா: கரகாட்டம் ஆடி மகிழ்ந்த வெளிநாட்டினர்

சுற்றுலா தின விழா: கரகாட்டம் ஆடி மகிழ்ந்த வெளிநாட்டினர்

1 mins read
d372e8b9-66a0-4e0e-bc78-979047dd069c
-

செங்­கல்­பட்டு: தமி­ழ­கம் முழு­வ­தும் சுற்­றுலா தினத்­தை­யொட்டி பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. மாமல்­ல­பு­ரம் கடற்­கரை கோவில் வளா­கத்­தில் ஆட்­டம், பாட்­டம் கொண்­டாட்­டத்­து­டன் சுற்­றுலா தின­விழா கொண்­டா­டப்­பட்­டது.

இவ்­வி­ழா­விற்கு வருகை தந்த வெளி­நாட்டு, உள்­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு சிறப்­பான வர­வேற்பு நல்­கப்­பட்­டது.

தமி­ழக கலா­சா­ரம், பாரம்­ப­ரி­யத்தை விளக்­கும் வகை­யில் அப்­பயணி­க­ளுக்கு நெற்­றி­யில் தில­க­மிட்டு, மலர் மாலை­கள் அணி­விக்­கப்­பட்­டன. இந்­நி­கழ்­வில் பல வண்­ணங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான பலூன்­கள் பறக்­க­வி­டப்­பட்­டன.

மேலும் இந்­நி­கழ்­வில் பங்­கேற்ற இங்­கி­லாந்து சுற்­றுப்­ப­யணி ஒரு­வர் கர­காட்­டம் ஆட விரும்­பி­யதை அடுத்து, அவ­ருக்­கும் (படம்) வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து தன் தலை­யில் கர­கம் வைத்து உள்­ளூர் கர­காட்­டக் குழு­வி­ன­ரு­டன் இணைந்து அவ­ரும் இசைக்­கேற்ப ஆடி மகிழ்ந்­தார்.

இந்நிலையில், மேலும் சில பயணி­களும் கர­காட்­டம் ஆடி உற்சாகம் அ­டைந்­த­னர். சுற்றுலா தின விழாவில் கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர்.