மோசடிப் பத்திரப் பதிவை ரத்து செய்ய புதிய நடைமுறையை அமல்படுத்தியது தமிழக அரசு

மோசடிப் பத்திரப் பதிவை ரத்து செய்ய புதிய நடைமுறையை அமல்படுத்தியது தமிழக அரசு

2 mins read
ffea76d9-c954-42d8-aafc-27d1f2e65b52
-

சென்னை: மோசடி பத்­திரப் பதிவை ரத்து செய்­யும் நடை­மு­றையை தமிழக அரசு அமல்­ப­டுத்தி உள்­ளது. இப்­பு­திய நடை­மு­றையை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று தொடங்கி வைத்­தார்.

இதன் மூலம் மோச­டி­யா­கப் பதிவு செய்­யப்­பட்ட ஆவ­ணத்தை ரத்து செய்­யும் அதி­கா­ரம் இனி பதிவு அலு­வ­ல­ருக்கு வழங்­கப்­படும்.

இது­வரை எந்த உயர் அலு­வ­ல­ருக்­கும் இந்த அதி­கா­ரம் வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே மோசடி ஆவ­ணப் பதி­வு­களை ரத்து செய்ய வேண்­டும் எனில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் நீதி­மன்­றங்­களை அணுக வேண்­டிய நிலையே இருந்து வந்தது.

இதை­யடுத்து, இந்த நிலை மாற முக்­கிய சட்­டத்திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

சட்­டத்திருத்­தம் மூலம் ஆள் மாறாட்­டம் போன்ற கார­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் பதிவு செய்­யப்­பட்ட ஆவ­ணங்­களை பதி­வுத்­து­றையே ரத்து செய்ய அதி­கா­ரம் அளிக்க தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில், 2021ஆம் ஆண்டு மசோதா நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்த மசோ­தா­விற்கு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி­யன்று ஆளு­நர் ஒப்­பு­தல் அளித்­தார்.

இனி நில அப­க­ரிப்பு அல்­லது மோசடி ஆவ­ணங்­கள் மூலம் பதிவு நடந்­தி­ருக்­கும் பட்­சத்­தில், மாவட்ட பதி­வா­ளர்­க­ளி­டம் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் நேர­டி­யாக புகார் அளிக்க முடி­யும்.

மனு­தா­ரர், எதிர் ­ம­னு­தா­ரர்­களை விசா­ரித்து பதிவு செய்­யப்­பட்ட ஆவ­ணம் போலி­யா­னது என்று கண்­ட­றி­யப்­பட்­டால், அந்த ஆவ­ணத்தை ரத்து செய்து மாவட்டப் பதி­வா­ளர் உத்­த­ர­வி­ட­லாம்.

இதன்­படி, நில அப­க­ரிப்பு மோசடி­யா­ளர்­க­ளால் பாதிக்­கப்­பட்ட, சொத்­தின் உண்­மை­யான உரி­மை­யா­ளர்­களுக்கு அச்­சொத்­தினை மீட்­டெ­டுத்­துக் கொடுக்­கும் வகை­யில், மோசடி ஆவ­ணப்­ப­தி­வு­களை மாவட்­டப் பதி­வா­ளர் ரத்து செய்திட பதி­வுச்­சட்­டத்­தில் வழி­வகை செய்யப்­பட்­டுள்­ளது.

"இதன்­மூ­லம், போலி ஆவ­ணங்­கள் பதி­வினை அறவே ஒழிக்க சட்­டத்­தின் துணை­யோடு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

"இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டட ஐந்து பேர் அளித்த புகார்­கள் முறை­யாக விசா­ரிக்­கப்­பட்டு, அவர்­க­ளு­டைய சொத்­து­களை அப­க­ரித்­த­வர்­க­ளி­டம் இருந்து அவை மீட்­கப்­பட்­டன.

"மோச­டி­யாக ஆவ­ணப் பதிவு செய்­யப்­பட்­டதை ரத்து செய்து அதற்­கான ஆவ­ணங்­களை முதல்வர் வழங்­கி­னார்," என்று அரசு வட்­டாரங்­கள் தெரி­வித்­தன.