குண்டு வீசி தப்பிக்க முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த காவலர்கள்

குண்டு வீசி தப்பிக்க முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த காவலர்கள்

1 mins read
3552ecf6-6922-4128-892d-8435aaccac29
குண்டு வீசி தப்பமுயன்ற ரவுடி சச்சினை காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். படம்: தமிழக ஊடகம் -

திருப்­பெ­ரும்­பு­தூர்: காவ­லர்­கள் மீது நாட்டு வெடி­குண்டை வீசி­விட்டு தப்­பிக்­க­மு­யன்ற ரவுடி சச்­சினை, அவ­ரது காலில் துப்­பாக்­கி­யால் சுட்டு காவ­லர்­கள் பிடித்­த­னர்.

பலத்த காய­ம­டைந்த சச்­சி­னுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

சென்­னையை அடுத்த தாம்­ப­ரம் அருகே உள்ள எரு­மை­யூ­ரைச் சேர்ந்­த­வர் பிர­பல ரவுடி சச்­சின், 29. இவர்­மீது, கொள்ளை, கொலை முயற்சி, தொழிலதி­பர்­களை மிரட்டிப் பணம் பறித்­தல் உள்­ளிட்ட பல வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன.

தலை­ம­றை­வாக இருந்த சச்­சின் நடு­வீ­ரப்­பட்டு அருகே ஒரு காட்­டுப் பகு­தி­யில் பதுங்­கி­யி­ருப்­ப­தாக காவ லர்களுக்கு தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, நேற்று அதி­காலை 4:30 மணிக்கு அங்கு காவ­லர்­கள் சென்­ற­னர். இத­னைப் பார்த்துவிட்ட சச்­சின் காவ­லர்­கள் மீது நாட்டு வெடி­குண்டை வீசி­னார். அந்த வெடி­குண்டு வெடிக்­கா­த­தால் காவலர்கள் உயிர் தப்­பி­னர். அங்­கி­ருந்து தப்­பி­யோட முயன்ற சச்­சினையும் அவ­ரது நண்­பர் பரத்தையும், 28, காவ­லர் பாஸ்­கர் மடக்­கிப் பிடித்­தார்.

அப்­போது சச்­சின் தான் வைத்­தி­ருந்த கத்­தி­யால் காவ­லர் பாஸ்­க­ரைக் குத்­தி­விட்டு தப்பினார். பாது­காப்புக்­காக காவல் ஆய்­வா­ளர் சிவ­கு­மார், தன் துப்­பாக்­கி­யால் சச்­சினை நோக்கி இரண்­டு­முறை அவ­ரது முட்டி, தொடைப் பகு­தி­யில் சுட்டார்.

குண்டடி­பட்டு விழுந்த சச்­சி­னைப் பார்த்து அவ­ரது கூட்­டாளி பரத் அங்­கி­ருந்து தப்­பி­னார்.

காவ­லர் பாஸ்­கர், ரவுடி சச்­சின் இருவரும் மருத்துவம­னை­யில் அனுமதிக்கப்பட்டனர்.