நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்கள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி எரிவாயு உருளை வெடித்ததில் ஆறு பேர் கவலைக்கிடம்

நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்கள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி எரிவாயு உருளை வெடித்ததில் ஆறு பேர் கவலைக்கிடம்

2 mins read
b34a4e53-6505-4017-9fda-0031b5bef22c
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக காயம் அடைந்தவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். படம்: தமிழக ஊடகம் -

காஞ்­சி­பு­ரம்: காஞ்­சி­பு­ரம் அருகே கிடங்­கில் வைக்­கப்­பட்­டி­ருந்த சமை யல் எரி­வாயு உரு­ளை­கள் திடீ ரென்று வெடித்­துச் சித­றி­ய­தில் 14 பேர் படு­கா­யம் அடைந்­த­னர்.

இவர்­களில் ஆறு பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்ள தாக ஊர­கத் தொழில்­துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் தெரி­வித்­துள்­ளார்.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், வாலாஜா பாத் அருகே உள்ள தேவ­ரி­யம்­பாக்­கம் பகு­தி­யில் தனி­யா­ருக்­குச் சொந்தமான எரி­வா­யுக் கிடங்கு ஒன்று செயல்­பட்டு வந்­தது.

இங்கு 20க்கும் மேற்­பட்­டோர் பணி­யாற்­றிக் ­கொண்­டி­ருந்­த­போது ஓர் எரி­வாயு உரு­ளை­யில் கசிவு ஏற்­பட்டு தீப்­பி­டித்து வெடித்­தது.

இத்­தீ­யா­னது மற்ற எரி­வாயு உரு ளைகள் மீதும் பரவி வெடித்­துச் சித­றி­ய­தில் அங்கு பணி­யில் இருந்த பல­ரும் தீக்­கா­யங்­க­ளு­டன் அலறி யடித்­துக்­கொண்டு வெளி­யில் ஓடி­வந்­த­னர். அரு­கில் இருந்த கடை­களில் வேலைபார்த்த ஊழியர்­களும் பலத்த காயம் அடைந்­த­னர்.

நேற்று முன்­தி­னம் இரவு நடந்த இவ்­வி­பத்­தில் கிடங்­கின் உரிமை யாளர் ஜீவா­னந்­தம், 48, பூஜா, 19, கிஷோர், 13, கோகுல், 22, அருண், 22, குணால், 22, சந்­தியா, 21, சக்தி வேல், 32, உட்­பட 14 பேர் 90% தீக்­கா­யங்களு­டன் செங்­கல்­பட்டு அரசு மருத்துவ­ம­னை­யில் அனு­மதிக்­கப்பட்­ட­னர்.

அவர்களை நேற்று காலை நேரில் பார்த்து அமைச்­சர் தா.மோ. அன்­ப­ர­சன் ஆறு­தல் கூறினார்.

செய்­தி­யா­ளர்களி­டம் பேசி­ய அவர், "விபத்­தில் கா­யமடைந்த 14 பேரில் ஆறு பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளதால் அவர்­களை சென்னை கீழ்ப்­பாக்­கம் அரசு மருத்­துவமனைக்கு மாற்­றும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

"அத்­து­டன், குடி­யி­ருப்­பு­கள் அதி­க­முள்ள பகு­தி­யில் இந்த எரி­வாயு உரு­ளைக் கிடங்கு எப்­படி அமைக்­கப்­பட்­டது என்­பது குறித்­தும் விசா­ரணை நடத்­தப்பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என­வும் உறுதி அளித்­தார்.

சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து, அவர்களுக்கு நிவா­ரண நிதி வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் மா.சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்தார். காவல்­துறையின் விசா­ர­ணைக்­குப்­ பிறகு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இவ்விபத்து தொடர்­பாக ஊராட்சி மன்­றத் தலை­வர் அஜய்­குமார், அவ­ரது மனைவி சாந்தி, உரி­மை­யா­ளர் பொன்­னி­வ­ள­வன், மோகன்­ராஜ் ஆகி­யோரிடம் காவலர்கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.