தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அளவில் சுற்றுப்பயணிகள் வருகையில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு

1 mins read
021e2687-0b59-4e38-9fa7-e6603b304b8a
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை இதுவரை ஆக அதிக அளவாக 1.4 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். இங்குள்ள கற்களில் புராணக் கதைகள், காவியப் போர்கள், கடவுள்கள், விலங்கினங்கள் என அனைத்தும் நளினமாகவும் மக்களுக்குப் புரியும் வகையில் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. படம்: தமிழக ஊடகம் -

புது­டெல்லி: தமி­ழ­கம், உள்­நாட்­டுச் சுற்­று­லாப் ­ப­ய­ணி­க­ளின் வருகையில் முத­லி­டத்­தை­யும் வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் ­ப­ய­ணி­க­ளின் வருகையில் இரண்­டாம் இடத்தையும் பிடித்­துள்­ள­தாக இவ்­வாண்­டுக்­கான புள்­ளி­வி­வ­ரங்­கள் சுட்­டிக்­காட்டி உள்­ளன.

உல­கச் சுற்­று­லாத் தினத்தை முன்­னிட்டு, தலை­ந­கர் டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற நிகழ்வில், 'இந்­திய சுற்­று­லாப் பயணி ­க­ளின் புள்­ளி­வி­வ­ரம் 2022' என்ற அறிக்­கையை துணை அதி­பர் ஜக்­தீப் தன்­கர் வெளி­யிட்­டார்.

அதில், இவ்­வாண்­டுக்­கான உள்­நாட்­டுப் பய­ணி­க­ளின் எண்­ணிக்­கை­யில் 15 கோடி பேரை ஈர்த்து தமி­ழ­கம் முத­லி­டத்திலும் ஒன்­பது கோடி பய­ணி­க­ளு­டன் உத்­த­ரப்­ பி­ர­தே­சம் இரண்­டாம் இடத்திலும் உள்­ள­தா­கக் கூறப்­படுகிறது.

இதே­போல், அதிக அளவில் 12.6 லட்­சம் வெளி­நாட்­டுப் பய­ணி­களை ஈர்த்­துள்ள மஹாராஷ்டிரா முத­லி­டத்­தி­லும் 12.3 லட்­சம் மக்களை ஈர்த்துள்ள தமி­ழ­கம் இரண்­டாம் இடத்­தி­லும் இருப்­ப­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உத்­த­ரப் ­பி­ர­தே­சத்­தின் ஆக்ரா நக­ரில் அமைந்­துள்ள தாஜ்­ம­ஹாலை 2021-2022ல் 30 லட்­சம் உள்­நாட்­டுப் பய­ணி­களும் 38,000 வெளி­நாட்­டுப் பய­ணி­களும் ரசித்­துள்­ள­னர்.

அதே­சமயத்­தில், தமி­ழ­கத்­தின் மாமல்­ல­பு­ரத்தை 1.4 லட்­சம் வெளி­நாட்­டுப் பய­ணி­கள் கண்டு ரசித்­துள்­ள­னர். புதுடெல்­லி­யில் உள்ள செங்­கோட்டை, குதுப்­மி­னார் ஆகி­ய­வற்றையும் உள்­நாட்டுப் பயணிகள் அதிகம் ரசித்துள்ளனர். இந்தியாவில் 3,693 பாரம்­ப­ரிய இடங்­கள் தொல்­பொ­ருள் துறை­யால் பாது­காக்­கப்­­பட்டு வருவதாகவும் அதில் கூறப்­பட்­டுள்­ளது.