கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தங்கப் புதையலுக்காக நண்பரைக் கொன்று நரபலி கொடுத்த காவ லாளி கைது செய்யப்பட்டார்.
கடந்த 28ஆம் தேதி தனது விவசாயத் தோட்டத்தில் தோண் டப்பட்ட ஒரு குழிக்குள் அமர்ந் திருந்த நிலையிலேயே லட்சு மணன், 50, என்ற விவசாயி உயிரிழந்து கிடந்தார்.
சந்தேகத்தைக் கிளப்பிவிட்டிருந்த இவரது மரணம் குறித்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கெலமங்கலம் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
விசாரணையில், காவலாளியாகப் பணிபுரிந்து வரும் லட்சுமணனின் நண்பர் மணி என்பவர், புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் லட்சுமணனை நரபலி கொடுத்தது தெரியவந்தது.
அண்மையில், லட்சுமணனின் விவசாயத் தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும் அதனை எடுக்க நரபலி கொடுக்கவேண்டும் எனவும் தர்மபுரியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனை நம்பிய லட்சுமணனும் மணியும் சேலம் மாவட்டம், மேச்சேரியைச் சேர்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட ராணி என்ற உறவுக்காரப் பெண்ணை நரபலி கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ராணியை லட்சுமணன் வீட்டிற்கு வரும்படி நண்பர்கள் இருவரும் அழைத்துள்ளனர்.
கடந்த 28ஆம் தேதி அதிகாலை யில் லட்சுமணனின் விவசாயத் தோட்டத்தில் நரபலி பூசையை நடத்துவதற்காக, பூசைப் பொருள்களுடன் மணியும் லட்சுமணனும் தயாராக இருந்துள்ளனர்.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்த படி ராணி அங்கு வராததால், ஏமாற்றமடைந்துள்ளனர்.
திடீரென லட்சுமணன் சாமி வந்ததுபோல் ஆடி, மணியை பலமாகத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, தன்னை அடித்துக் கொன்று, புதையலை லட்சுமணன் அபகரிக்க நினைப்பதை அறிந்த மணி, லட்சுமணனை அடித்துக்கொன்று, குழிக்குள் அமரவைத்து, நரபலி கொடுத்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் புதையல் வராததால், அங்கிருந்த லட்சுமணனின் பைக்கை எடுத்துக்கொண்டு மணி தப்பிச் சென்றுவிட்டார் என்று காவலர்கள் கூறியுள்ளனர்.