கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கிக் கணக்குகளை முடக்கிய காவல்துறை

1 mins read
a0bff0cc-b8f3-40ab-8b01-b1aac27b4b70
-

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் கஞ்சா வியா­பா­ரி­க­ளு­டன் தொடர்­பு­டைய, இரண்­டா­யி­ரம் வங்­கிக் கணக்­கு­களை தமி­ழக காவல்­துறை முடக்கி உள்­ளது.

இதன் மூலம் ஐம்­பது கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­கள் முடக்­கப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

தமி­ழ­கத்­தில் கஞ்சா புழக்­கம் அதி­க­ரித்து வந்­ததை அடுத்து, 'ஆப­ரே­சன் கஞ்சா' நட­வ­டிக்­கையை காவல்­துறை தொடங்­கி­யது.

மாநி­லம் முழு­வ­தும் கஞ்சா வியா­பா­ரி­கள் பலர் கைது செய்­யப்­பட்­ட­னர். இத­னால் கஞ்சா விற்­பனை, பயன்­பாடு ஆகி­ய­வற்­று­டன் தொடர்­புள்ள குற்­றச்­செ­யல்­க­ளின் எண்­ணிக்கை குறை­யத் தொடங்­கின.

இதை­ய­டுத்து கஞ்சா வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

கடந்த டிசம்­பர் மாதம் தமி­ழக காவல்­துறை தலை­வர் சைலேந்­திர பாபு­வின் உத்­த­ர­வின் பேரில் தொடங்­கிய 'ஆப­ரே­சன் கஞ்சா 2.0' நட­வ­டிக்கை, கடந்த மார்ச், ஏப்­ரல் மாதங்­களில் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டதை அடுத்து, தென் மாவட்­டங்­களில் போதைப்­பொ­ருள் பயன்­பாடு நன்கு குறைந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கஞ்சா வியா­பா­ரி­க­ளைக் கைது செய்­வ­து­டன் நிற்­கா­மல், அவர்­க­ளின் சொத்­து­க­ளை­யும் பறி­மு­தல் செய்ய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. இத­னால் கஞ்சா வியா­பா­ரி­கள் மத்­தி­யில் அதிர்ச்சி நிலவி வரு­கிறது.

இந்­நி­லை­யில், இரண்­டா­யி­ரம் கஞ்சா வியா­பா­ரி­க­ளின் வங்­கிக் கணக்­கு­களை முடக்கி, சொத்­து­களைப் பறி­மு­தல் செய்ய தமி­ழக காவல்­துறை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.