மத்திய அரசு தமிழக இளையர்களுக்கு அநீதி இழைப்பதாகப் புகார் தமிழில் தேர்வுகளை நடத்துக: வெங்கடேசன் வலியுறுத்து

2 mins read
95dc6153-543d-4b0b-bf81-9b5c5c94e210
சு.வெங்கடேசன். படம்: ஊடகம் -

மதுரை: மத்­திய அர­சால் நடத்­தப்­படும் தேசிய அள­வி­லான தேர்­வு­கள் அனைத்­தும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மொழி­க­ளில்­தான் நடத்­தப்­பட வேண்­டும் என மதுரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன் வலி­யு­றுத்தி உள்­ளார்.

பல்­வேறு துறை­க­ளுக்­கான காலிப் பணி­யி­டங்­களை நிரப்­பும் பொருட்டு, மத்­திய பணி­யாளா் தோ்வாணை­யம் பல்­வேறு தேர்­வு­களை நடத்­து­கிறது.

இத்­தேர்­வு­க­ளுக்கு மாநில மொழி­க­ளி­லும் வினாத்­தாள் தயா­ரிக்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மது­ரை­யில் நடை­பெற்ற மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான சிறப்பு முகா­மில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆங்­கி­லத்­தி­லும் இந்­தி­யிலும் மட்­டுமே தேசிய அள­வி­லான தேர்வு­கள் நடத்­தப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

இதன் கார­ண­மாக இந்­தியை தாய்­மொ­ழி­யாக கொண்­ட­வர்­கள்­தான் அந்­தத் தேர்­வு­களில் அதிக அள­வில் தேர்ச்சி பெறு­வ­தாக சு.வெங்­க­டே­சன் சுட்­டிக்­காட்­டி­னார்.

"தேசிய அள­வி­லான தேர்­வு­களில் கேள்­வி­கள் அனைத்­தும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மொழி­களில் இருக்க வேண்­டும். தற்­போது இந்தி, ஆங்­கி­லத்­தில் மட்­டும் வினாத்­தாள்­கள் உள்­ளன. இது இந்­தியை தாய்­மொ­ழி­யாக கொண்­ட­வர்­க­ளுக்கு சாத­க­மாக உள்­ளது.

"தேர்­வு­க­ளுக்­கான கேள்­வித்­தாள் தமி­ழில் இல்லை என்­பது தமி­ழக இளை­யர்­க­ளுக்கு செய்­யப்­படும் அநீதி," என்­றார் சு.வெங்­க­டே­சன்.

இதற்­கி­டையே, மத்­தி­யப் பணி­யாளா், பொது மக்­கள் குறை­கள், ஓய்­வூ­தி­யத்­துறை இணை அமைச்சா் ஜிதேந்­திர சிங்­குக்கு எழு­தி­யுள்ள கடி­தம் ஒன்­றில், மத்­திய அமைச்­சு­கள், துறை­கள், அரசு நிறு­வ­னங்­கள், அர­சி­யல் சாசன அமைப்­பு­கள், தீா்ப்பா­யங்­கள் உள்­ளிட்ட இடங்­களில் உள்ள 20,000 காலி­யி­டங்­க­ளுக்கு பணி­யாளா் தோ்வாணை­யம், பணி நிய­மன அறி­விக்­கையை வெளி­யிட்­டுள்­ளதை அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"இந்­தத் தோ்வுக­ளுக்கு ஒரு கோடி போ் வரை விண்­ணப்­பிக்க வாய்ப்­புள்­ளது. பணி நிய­ம­னத் தோ்வுக் கேள்­வித்­தாள் இந்தி, ஆங்கி­லம் என இரு மொழி­களில் மட்டுமே இருக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தோ்வில் மாநில மொழி­க­ளுக்கு இடம் இல்லை. இது சம­வாய்ப்பு என்ற கோட்­பாட்­டுக்கு எதி­ரா­னது. இந்­தத்­தோ்­வு­க­ளின் மூலம் பணி நிய­ம­னம் பெறும் ஊழி­யா்­கள் நாடு முழு­வ­தும் பணி­ய­மா்­த்­தப்­பட உள்­ளனா். உள்ளூா் மொழி அறிவு இல்­லா­மல் இவா்கள் மக்­க­ளுக்கு எப்­படி சேவையாற்­ற ­மு­டி­யும்?" என்று எம்பி சு.வெங்­க­டே­சன் கேள்வி எழுப்பி உள்­ளார்.

ஒருங்­கி­ணைந்த பட்­ட­தாரி நிலை தேர்­வு­க­ளுக்­கான கேள்­வித்­தாள் தமி­ழில் இல்லை என்று டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், இந்­திக்­கான தனி உரிமை கொடுக்­கப்­ப­டு­வதை எதிர்த்து, இந்­தி­யா­வுக்­கான பொது உரி­மையை நிலை­நி­றுத்­து­வோம் என்று தெரி­வித்­துள்­ளார்.

மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் சு.வெங்கடேசன்்.