தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைக்குச் சொத்தில்லை'

1 mins read
281de5df-37e3-4c77-babc-4fb38c4a8c47
-

சென்னை: பெற்­றோ­ரைப் பரா­ம­ரிக்­காத பிள்­ளை­க­ளுக்கு இனி சொத்து கிடை­யாது என சென்னை உயர் நீதி­மன்ற நீதி­பதி ஆஷா உத்­த­ர­விட்­டுள்­ளார்.

சமு­தா­யம் தனது நல்ல பண்­பு­களை வேக­மாக இழந்து வரு­வ­தாக வேதனை தெரி­வித்த அவர், தங்­க­ளது நல­னில் அக்­கறை காட்­டாத பிள்­ளை­க­ளுக்கு எழு­திக் கொடுத்த சொத்தை ரத்து செய்­வ­தற்கு பெற்­றோ­ருக்கு உரிமை உள்­ளது எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

சென்­னை­யைச் சேர்ந்த ஓய்­வு­பெற்ற விமா­னப்­படை அதி­காரி, தனது சொத்­து­களை மூத்த மக­னுக்கு எழுதி வைத்­தி­ருந்­தார். ஆனால், வய­தான காலத்­தில் தங்­க­ளைக் கவ­னிக்­கா­ம­லும் மருத்­து­வச் செல­வு­க­ளுக்கு உதவி செய்­யா­ம­லும் இருந்­த­தால், தங்­க­ளது சொத்­து­களை தங்களிடமே திருப்­பித் தர உத்­த­ர­வி­டக் கோரி பெற்­றோர் வழக்கு தொடர்ந்­த­னர். இவ்­வ­ழக்கை கீழ் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்த நிலை­யில், உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது. "மகன்­க­ளின் செயல்­பாடு இத­ய­மற்­றது," என விமர்­சித்த நீதி­பதி, கவ­னிக்­காத குழந்­தை­க­ளுக்கு சொத்­து­கள் எழுதி வைத்­ததை ரத்து செய்ய பெற்­றோ­ருக்கு உரிமை உள்­ள­தாக உத்­த­ர­விட்­டார்.