சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். காலியாக இருந்த துணைப் பொதுச் செய லாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நிய மனம் செய்து முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சை யப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர். பாலுவும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
திமுகவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஐவரில் ஒருவராக திமுகவின் மகளிரணிச் செய லாளராக இருந்து வரும் கனிமொழிக்கும் வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, அப்பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இது திமுக நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
கனிமொழிக்குக் கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய பதவியானது அவரது பொறுமைக்குக் கிடைத்த பரிசு என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
"கனிமொழி நினைத்திருந்தால் தனக்கு முக்கிய பதவியைத் தரவேண்டும் என பிரச்சினையைக் கிளப்பிவிட்டு பெற்றிருக்கமுடியும்.
"ஆனால், தனது திறமையை அங்கீகரித்து கட்சித் தலைமை பதவியைத் தரவேண்டும் என பொறுமையுடன் கட்சிக்காகப் பணியாற்றிவந்தார். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது," என்று கட்சி நிர்வாகிகளில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
கனிமொழிக்கான பதவி அறிவிப்பை வெளியிடும்போது, "டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி திமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்படுகிறார்," என ஸ்டாலின் அடை மொழியுடன் அறிவித்தார்.
கனிமொழியைப் போலவே திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, திமுக எம்.பி. ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரையும் அடைமொழிகளுடன் அழைத்தார்.
இதனைத்தொடர்ந்து "அப்பா கருணாநிதி இல்லாத இடத்தில் அண்ணன் ஸ்டாலினை வைத்து பார்ப்பதாக கனிமொழி உருக்கமாகப் பேசினார். உங்கள் போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்கத் தயாராக உள்ளேன்," என அவர் சொன்னார்.

