சென்னை: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 முதல் 7 மணி வரையும் இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
அத்துடன், அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்த்து விடும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, வாரியம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியன்று காலை 6-7 மணி வரையும் இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்.
காற்று மாசுபாட்டை அதிகம் ஏற்படுத்தாக பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்கவேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதியாக உள்ள இடங்கள் அருகே பட்டாசு வெடிப்ப தைத் தவிர்க்கவேண்டும்.
குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்கள் உள்ள பகுதிகளிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

