தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,000 டன் இட்லி அரிசி ஏற்றுமதி செய்யப்பட முடியாமல் தேக்கம்

1 mins read
18e04ffe-0656-4e26-9888-d75b1284676d
-

தூத்­துக்­குடி: சென்னை, தூத்­துக் குடி துறை­மு­கங்­களில் பச்­ச­ரி­சியா, புழுங்­கல் அரி­சியா என்ற குழப்­பத்­தால் ஏறக்­கு­றைய ஆயி­ரம் டன் இட்லி அரிசி எற்­று­மதி செய்­யப்­படா­மல் தேக்­கம் அடைந்து இருப்­ப­தாக அரிசி ஆலை உரி­மை­யா­ளர்­கள் குற்­றம்­சாட்டி உள்­ள­னர்.

நடப்பு பரு­வத்­தில் நெல் சாகு­படி குறைந்­துள்­ள­தால் பாசுமதி, புழுங்­கல் அரி­சி­யைத் தவிர மற்ற ரக அரிசி எற்­று­ம­திக்கு 20 விழுக்­காடு வரி விதித்து மத்­திய அரசு கடந்த மாதம் உத்­த­ர­விட்­டது.

இந்­நி­லை­யில், பார்ப்­ப­தற்கு பச்­சரி­சி­யைப் போன்று இருக்­கும் இட்லி புழுங்கல் அரி­சிக்­கும் வரி செலுத்தவேண்­டும் என அதி­கா­ரி­கள் கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தா­க­வும் ஆலை உரிமையாளர்கள் தரப்பில் புகார்­ கூறப்­ப­டு­கிறது.

துபாய், ஜப்­பான், கனடா, சிங்­கப்­பூர் உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு தமி­ழ­கத்­தில் விளை­யும் பாரம்­ப­ரிய இட்லி அரிசி அதிக அள­வில் ஏற்று­மதி செய்­யப்­படு­கிறது. ஆனால், சுங்­கத்துறை அதி­கா­ரி­க­ளின் குழப்­பத்­தால் துறை­மு­கங்­களில் 1,000 டன் புழுங்­கல் இட்லி அரிசி ஏற்­று­ம­தி­யா­கா­மல் தேங்­கி­யுள்­ளது.