தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னல் வேட்டை: 3,000 ரவுடிகள் அதிரடிக் கைது

3 mins read
f2b9e843-3bfb-471e-a9ea-1b1347b67c6e
-

தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

சென்னை: 'மின்­னல் ரவுடி வேட்டை' நட­வ­டிக்கை மூலம் தமி­ழ­கம் முழு­வதும் கடந்த மூன்று நாள்­களில் மட்­டும் 3,095 ரவு­டி­கள் கைது செய்­யப்­பட்­­டுள்­ள­னர்.

இந்­தக் கைது நட­வ­டிக்கை நீடிக்­கும் என காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

அண்­மை­யில் தேசிய பாது­காப்பு முகமை அதி­கா­ரி­கள் சேலத்­தில் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். அப்­போது விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கத்­திற்கு ஆத­ர­வா­கச் செயல்­பட்டு வந்த சேலத்தைச் சேர்ந்த 24 வயது நவீன் சக்­க­ர­வர்த்தி, 24 வயது சஞ்­சய் பிர­காஷ் ஆகிய இரு­வ­ரும் பிடி­பட்­ட­னர்.

இரு­வ­ரு­டன் தொடர்­புள்ள இடங்­களில் இருந்து பல்­வேறு ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

தமி­ழ­கத்­தில் பெரிய அள­வில் தாக்­கு­தல் நடத்­து­வது தொடர்­பான விவ­ரங்­கள் அவற்­றில் இடம்­பெற்­றி­ருந்­தன. முக்­கிய அர­சி­யல் தலை­வர்­களைக் கொலை செய்­வ­தற்கு இரு­வ­ரும் திட்­ட­மிட்­டி­ருந்­த­தும் அதற்­காக இணை­யம் வழி துப்­பாக்­கி­கள் வாங்­கி­யது குறித்த தக­வல்­களும் தெரி­ய­வந்­தன.

மேலும், தாக்­கு­தல் நடத்­தும்­போது காவல்­து­றை­யி­டம் சிக்­கி­னால் உயிரை மாய்த்­துக்­கொள்ள சய­னைட் குப்­பி­யும் தயா­ரித்­துள்­ள­னர். கைதான இரு­வ­ரும் விடு­தலைப்­பு­லி­க­ளின் மறை­முக ஆத­ர­வா­ளர்­கள் சில­ரு­டன் தொடர்பில் இருந்­த­தா­க­வும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தொடர்­பு­கொள்ள 'வாக்கி டாக்கி' பயன்­ப­டுத்­தி­ய­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது.

இந்த கைது நட­வ­டிக்கை மூலம் தமி­ழ­கத்­தில் நடத்­தப்­பட இருந்த மிகப்­பெ­ரிய தாக்­கு­தல் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­துள்ள நிலை­யில், தமி­ழ­கம் மற்றோர் ஆபத்தை எதிர்­கொண்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் நவம்­பர் 6ஆம் தேதி­யன்று, தமி­ழ­கத்­தில் பல்­வேறு பகு­தி­களில் ஆர்­எஸ்­எஸ் இயக்­கம் பேர­ணி­கள் நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது. ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட இடங்­களில் இதற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், இந்­தப் பேர­ணி­யின்­போது ஒரு தரப்­பி­னர் தாக்­கு­தல் நடத்த வாய்ப்­புள்­ள­தாக மத்­திய உள­வுத்­துறை தெரி­வித்­துள்­ளது.இது தொடர்­பாக தமி­ழக அர­சுக்கு உள­வுத்­துறை எச்­ச­ரிக்கை குறிப்பு அனுப்பி உள்­ள­தா­கத் தெரிகிறது.

இதை­ய­டுத்து, பேர­ணியை முன்­னின்று நடத்­தும் மதுரை, கோவை பகு­தி­க­ளைச் சேர்ந்த ஆர்­எஸ்­எஸ் முக்­கிய நிர்­வா­கி­க­ளுக்கு பலத்த பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது.

மேலும், பல்­வேறு இந்து அமைப்­பு­க­ளைச் சேர்ந்த பிர­மு­கர்­க­ளுக்­கும் காவல்­துறை பாது­காப்பு வழங்கி உள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உள­வுத்­து­றை­யின் எச்­ச­ரிக்­கையை அடுத்து, தமி­ழ­கம் முழு­வ­தும் காவல்­துறை 'ஆப­ரே­ஷன் மின்­னல்' என்ற பெய­ரில் ரவு­டி­க­ளைக் கைது செய்­யும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது.

இதன் மூலம் கடந்த மூன்று நாள்­களில் மட்­டும், மூவா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட ரவு­டி­கள் பிடி­பட்­டுள்­ள­னர்.

தென் மாவட்­டங்­களில் பல்­வேறு குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்டு வந்த ராக்­கெட் ராஜா உள்­ளிட்­டோர் கைதாகி உள்­ள­னர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்­ளிட்ட ஒன்­பது மாந­கரக் காவல்­துறை ஆணை­யர்கள், 37 மாவட்­டக் காவல் கண்­கா­ணிப்­பாளர்­கள் மேற்­பார்­வை­யில் நடை­பெற்ற தேடு­தல் நட­வ­டிக்­கை­யின்­போது 3,095 ரவு­டி­கள் கைதா­கி­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து துப்­பாக்­கி­கள், அரி­வாள், பட்­டாக்­கத்­தி­கள் உள்­ளிட்ட கொடூர ஆயு­தங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

கைதா­ன­வர்­களில் 489 பேர் காவல்­து­றை­யி­ன­ரால் தேடப்­பட்டு வந்த ரவு­டி­கள் ஆவர்.

216 பேர் நீதி­மன்­றத்­தால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்டு தலை­மறை­வாக இருந்­த­வர்­கள் என்­றும் 2,390 பேர் காவல் நிலை­யப் பதி­வேடு குற்­ற­வா­ளி­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­கள் அனை­வரி­ட­மும் நன்­ன­டத்­தைப் பிணைப் பத்­தி­ரம் எழுதி வாங்­கப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.