காவல்துறையில் 'மகிழ்ச்சி அலுவலர்கள்' நியமனம்

காவல்துறையில் 'மகிழ்ச்சி அலுவலர்கள்' நியமனம்

1 mins read
abb9ba71-8333-4b6f-bdc5-c85d9f7d7121
-

கோவை: காவல்­து­றை­யி­னர் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளால் மன அழுத்­தத்­துக்­கும் உளைச்­ச­லுக்­கும் ஆளாகி வரும் நிலை­யில், இதற்கு தீர்வு காணும் வகை­யில் கோவை மாந­கரக் காவல் நிலை­யங்­களில் மகிழ்ச்சி அலு­வ­லர்­கள் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இது தொடர்­பாக கோவை மாநகரக் காவல்­துறை வெளி­யிட்ட செய்­திக் குறிப்­பில், ஒவ்­வொரு காவல் நிலை­யத்­தி­லும் தலா இரண்டு 'மகிழ்ச்சி அலு­வ­லர்­கள்' தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவர்­கள் காவல் ஆணை­ய­ரின் பிர­தி­நி­தி­க­ளா­கச் செயல்­ப­டு­வர் என்­றும் காவ­லர்­கள் எதிர்­கொள்­ளும் மன­ந­லம் சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய ஆலோ­ச­னை­கள் வழங்கி, உத­வி­க­ர­மாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்­பட்டுள்ளது.

"மகிழ்ச்சி அலு­வ­லர்­க­ளுக்கு மன அழுத்த மேலாண்மை தொடர்­பாக சிறப்­புப் பயிற்சி அளிக்க ஏது­வாக மாந­கரக் காவல் ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் மன­நல ஆலோ­ச­கர்­கள் பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ள­னர். மன­ந­லம் தொடர்­பான சவால்­கள் உள்ள காவ­லர்­க­ளுக்­கும் அவர்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இவர்­கள் மூலம் ஆலோ­சனை வழங்­கப்­படும்.

"மேலும், கோபத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத காவ­லர்­கள், மக்­க­ளி­டம் பண்­பா­கப் பேசு­வ­தில் பிரச்­சி­னை­கள் உள்­ள­வர்­கள், மன­ந­லம் தொடர்­பான ஆலோ­சனை தேவைப்­ப­டு­வோர் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளுக்­கும் ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­படும்," என காவல்­துறை அறிக்­கை­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.