சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு: ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மீண்டும் மோதல்

சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு: ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மீண்டும் மோதல்

1 mins read
5b69bcce-3059-4cfb-a61a-ab9e52f5e499
-

சென்னை: அதி­முக இரு பிரி­வா­கச் செயல்­பட்டு வரும் நிலை­யில், எதிர்­வ­ரும் தமி­ழக சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தில் அக்­கட்சி எம்­எல்­ஏக்­கள் பங்­கேற்­பார்­களா எனும் சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

பேர­வை­யில் இருக்­கை­களை ஒதுக்­கீடு செய்­வது தொடர்­பில் அதி­மு­க­வின் இரு பிரி­வி­ன­ரும் சபா­நா­ய­க­ரி­டம் மனு அளித்­துள்­ள­னர்.

இரு மனுக்­க­ளை­யும் பரி­சீ­லித்து வரு­வ­தாக சபா­நா­ய­கர் அப்­பாவு தெரி­வித்­தார். பர­ப­ரப்­பான அர­சி­யல் சூழ்­நி­லைக்கு மத்­தி­யில் எதிர்­வ­ரும் 17ஆம் தேதி தமி­ழக சட்­டப்­பே­ரவை கூடு­கிறது.

அச்­ச­ம­யம், எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி அருகே உள்ள இருக்­கை­யில் ஓ.பன்­னீர்­செல்­வம் அமர முடி­யுமா எனும் கேள்வி எழுந்­துள்­ளது.

சட்­டப்­பே­ரவை நிகழ்­வு­கள் தொடர்­பாக முடி­வெ­டுக்­கும்­போது அதி­மு­க­வின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் என்ற முறை­யில் தம்­மி­டம் கலந்­தா­லோ­சிக்க வேண்­டும் என சபா­நா­ய­க­ருக்கு ஓ.பன்­னீர்­செல்­வம் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், சட்­டப்­பே­ரவை நட­வ­டிக்­கை­கள் குறித்து முடி­வெ­டுக்­கும் அலு­வல் ஆய்­வுக்­கு­ழு­வில் எதிர்க்­கட்சி துணைத்­த­லை­வர் என்ற அடிப்­ப­டை­யில், ஆர்.பி.உத­ய­கு­மாரை பங்­கேற்க அனு­ம­திக்க வேண்­டும் என்று எடப்­பாடி பழ­னி­சாமி தரப்பு சபா­நா­ய­க­ரி­டம் மனு அளித்­தி­ருப்­ப­தா­கத் தெரி­கிறது.

சபா­நா­ய­கர் இதை ஏற்­கும் பட்­சத்­தில், எதிர்க்­கட்சி துணைத்­த­லை­வர் பத­வி­யில் இருந்து ஓ.பன்­னீர்­செல்­வம் நீக்­கப்­ப­டு­வார். மேலும், பேர­வை­யில் அவ­ரது இருக்கை மாற்றி அமைக்­கப்­படும்.

அவ்­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டால், பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் பேரவை நட­வ­டிக்­கை­க­ளைப் புறக்­க­ணிக்க முடிவு செய்­துள்­ள­தா­கத் தெரி­கிறது. ஒரு­வேளை ஓபி­எஸ் தரப்பு கோரிக்கை ஏற்­கப்­பட்­டால் பழ­னி­சாமி தரப்­பி­னர் அவை நட­வ­டிக்­கை­க­ளைப் புறக்­க­ணிக்க உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.