தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாடகைத்தாய் விவகாரம்: விதிமுறைகள் மீறப்பட்டதா என நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் விசாரணை

1 mins read
4d67c3bd-050f-4e7a-9346-0212661ebc48
நயன்தாரா, விக்னேஷ் சிவன். படம்: ஊடகம் -

சென்னை: வாட­கைத்­தாய் மூலம் குழந்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான விதி­மு­றை­களை மீறி­ய­தாக எழுந்­துள்ள புகார் தொடர்­பில் நடிகை நயன்­தாரா, இயக்­கு­நர் விக்­னேஷ் சிவன் தம்­ப­தி­ய­ரி­டம் விசா­ரணை நடத்த தமி­ழக சுகா­தா­ரத்­துறை முடிவு செய்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

கடந்த ஜூன் 9ஆம் தேதி இரு­வ­ருக்­கும் திரு­ம­ணம் நடை­பெற்­றது.

இந்­நி­லை­யில், தங்­க­ளுக்கு இரண்டு ஆண் குழந்­தை­கள் பிறந்­தி­ருப்­ப­தாக விக்­னேஷ் சிவன் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

இதை­ய­டுத்து, வாட­கைத்­தாய் மூலம் இரு­வ­ருக்­கும் குழந்தை பிறந்­தி­ருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

மேலும், வாட­கைத்­தாய் மூலம் குழந்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வகுக்­கப்­பட்­டுள்ள விதி­மு­றை­களை நயன்­தாரா, விக்­னேஷ் சிவன் தம்­ப­தி­யர் மீறி­விட்­ட­தாக புகார் எழுந்­துள்­ளது.

கர்ப்­பப்பை குறை­பாடு, கரு கலை­வது போன்ற மருத்­து­வக் கார­ணங்­கள் இருந்­தால் மட்­டுமே வாட­கைத் தாயை நாட முடி­யும்.

வாட­கைத் தாய்க்கு மருத்­து­வக் காப்­பீடு செய்ய வேண்­டும் என்­பன உள்­ளிட்ட பல்­வேறு விதி­மு­றை­கள் உள்­ளன.

இந்­நி­லை­யில், திரு­ம­ண­மான நான்கு மாதங்­க­ளுக்­குள் இரு குழந்­தை­கள் பிறந்­தி­ருப்­ப­தாக விக்­னேஷ் சிவன் தெரி­வித்­துள்­ளது சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

இரு­வ­ரும் விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி வாட­கைத்­தாய் மூலம் குழந்­தை­க­ளைப் பெற்­றுள்­ள­னரா என்று சுகா­தா­ரத்­துறை மூலம் விசா­ரிக்­கப்­படும் என அத்­து­றை­யின் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.