அரசு வேலைவாய்ப்பில் தங்கள் துறையையும் இணைக்கக்கோரி ஆணழகன்கள் மனு

அரசு வேலைவாய்ப்பில் தங்கள் துறையையும் இணைக்கக்கோரி ஆணழகன்கள் மனு

1 mins read
fdce5b81-a17c-40ea-9ca6-5b0170e19f2a
கடந்த வாரம் மதுரை மாவட்ட ஆணழகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாரீஸ்வரன் (நடுவில்) உள்ளிட்ட ஆணழகன்கள் வெங்கடேசன் எம்.பி. (சிவப்பு சட்டை) முன்பாக ஒரு சிறிய ஆணழகன் போட்டியை நடத்தி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரும்படி மனு அளித்தது பலரையும் கவர்ந்தது. படம்: ஊடகம் -

மதுரை: மாநில அரசின் விளை யாட்டுத் துறைக்கான மூன்று விழுக்காடு வேலைவாய்ப்பில் தாங்கள் சார்ந்துள்ள ஆணழகன் துறையையும் இணைக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ஆண ழகன்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினிடம் தங்களது இந்தக் கோரிக்கை குறித்து எடுத் துரைக்கும்படி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மாநிலம், தேசியம், அனைத் துலக அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆணழகன்களில் மத்திய அரசின் ரயில்வே, தபால், வருமான வரி, ராணுவ முப்படை உள்ளிட்ட துறை களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழக அரசும் ஆணழகன் துறைக்குரிய வேலைவாய்ப்புகளை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.