ெடல்லியில் பட்டாசுத் தடையை நீக்க கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் வலியுறுத்து

ெடல்லியில் பட்டாசுத் தடையை நீக்க கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் வலியுறுத்து

1 mins read
7fa83e3a-1e58-4dda-ac3d-a544d4102972
-

சென்னை: சிவ­காசி பகு­தி­யைச் சேர்ந்த லட்­சக்­க­ணக்­கான மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைக் கருத்­தில் கொண்டு, விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்ட பட்­டாசு விற்­ப­னையை டெல்­லி­யில் அனு­ம­திக்­கு­மாறு டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வாலை தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின் வலி­யு­றுத்தி உள்­ளார்.

ஸ்டா­லின் எழு­தி­யுள்ள கடி­தத்­தில், வேறு எந்த மாநி­ல­மும் பட்­டா­சுக்கு முழு­மை­யா­கத் தடை விதிக்­கா­த­போது, டெல்­லி­யில் மட்­டும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் தடையை நீக்­கு­வ­தன் மூலம் சிவ­கா­சி­யைச் சுற்­றி­யுள்ள லட்­சக்­க­ணக்­கான மக்­க­ளின் குறிப்­பாக, வாழ்­வா­தா­ரத்­துக்­காக இந்­தத் தொழிலை நம்­பி­யுள்ள பெண்­க­ளின் வாழ்க்­கை­யில் ஒளி­யேற்ற இய­லும் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

எனவே, விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்ட பட்­டா­சு­க­ளின் விற் பனையை டெல்­லி­யில் அனு­ம­திக்கு மாறும் கெஜ்­ரி­வாலை ஸ்டா­லின் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

பட்­டாசு விற்­ப­னைக்கு ஒட்­டு­மொத்த தடை விதிக்­கக்­கூ­டாது என கடந்த 2021 அக்­டோ­ப­ரில் தான் கெஜ்­ரி­வா­லி­டம் வலி­யு­றுத்தி இருந்­த­தை­யும் நினைவு கூர்ந்­துள்­ளார்.

கொண்­டாட்­டத்­தின் அடை­யா­ள­மாக பட்­டா­சு­களை வெடிப்­பது என்­பது அனைத்­து­லக நடை­முறை தான்.

இந்­திய நக­ரங்­களில் காற்று மாசு­பாட்­டுக்கு முக்­கிய காணங்­க­ளாக வாக­னங்­களும் தொழிற்­சாலை கழி­வு­களும் உள்ள நிலை­யில், ஒரு சில நாள்­க­ளில் மட்­டும் வெடிக்­கப்­படும் பட்­டா­சு­க­ளால் மிகக் குறைந்த அள­வி­லான மாசு­பாடே ஏற்­படும் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

பட்­டாசு உற்­பத்­தி­யில் ஈடு­படும் ஊழி­யர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை கருத்­தில்­கொண்டு அறி­வி­யல் முறைப்­படி தயா­ரிக்­கப்­படும் பசுமை பட்­டா­சு­களை விற்­ப­தற்கு உச்ச நீதி மன்­றம் அனு­மதி அளித்­துள்­ள­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.