திருவாரூர்: திருவாரூர் மாவட்டத் தில் உள்ள கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு களவுபோன ஒன்பது சிலைகளில் ஐந்து சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகங்களில் இருப்பது தெரியவந்துள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திருடப்பட்ட பழங்காலச் சிலைகளை அமெரிக்க அருங்காட்சியகங்களில் இருந்து மீட்டெடுப்பதற்கான ஆவணங்களையும் அதிகாரி கள் சமர்ப்பித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் இருந்து திருடப்பட்ட பழங்கால விஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி, யோக நரசிம்மர், விநாயகர் சிலைகள் அமெரிக்காவின் மிசோரி, கன்சாஸ், நெல்சன்-அட்கின்ஸ் அருங்காட்சியகங் களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலோகச் சிலைகள் திருடப்பட்டு அதற்குப் திலாக போலிச் சிலைகள் பிரதி எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக வும் கூறப்படுகிறது.
களவு போன சிலைகள் குறித்த புகைப்படங்கள் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் அலுவலகத்தில் கிடைத்ததை அடுத்து, அவற்றின் உதவியுடன் சிலைகளை மீட்க ஆவ ணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களின் மூலம் காணாமல்போன ஒன்பது சிலைகளில் ஐந்து சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து விரைவில் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் கூறியுள்ளனர்.
மீதமுள்ள நான்கு சிலைகளும் அமெரிக்காவில் உள்ளதா என்றும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

