கோவை: கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா சாலையில் ஜேம்ஸ் என்பவர் எல்இடி கடை நடத்தி வருகிறார். இவரிடம், கடந்த 4ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் தீபாவளிச் செலவுக்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். "இப்போது பணமில்லை, வரும் 20ஆம் தேதிக்கு மேல் தருகிறேன்," என ஜேம்ஸ் கூறியுள்ளார். அதன்பிறகும், தூய்மைப் பணியாளர் ரூ. 500 கேட்டு தொந்தரவு செய்யவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பையைக் கொண்டு வந்து ஜேம்ஸ் கடையின் முன்பு கொட்டும் காட்சிகள் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி, இப்போது சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
இதுபோல், பணம் தராதவர் களின் கடைகள் முன்பு ஒரு சில தூய்மைப்பணியாளர்கள் குப்பையைக் கொட்டிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

