வேளச்சேரி: பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை 1,730 ஏக்கரில் பரவியுள்ளது. இங்கு அரிய வகை உள்ளூர்ப் பறவை களும் பல்வேறு நீர்வாழ் உயிரி னங்களும் காணப்படுகின்றன.
இந்த அக்டோபர் மாத இறுதி யில் இப்பகுதிக்கு வரும் பறவை களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளில் பேதை உள்ளான், ஐரோப்பா, ரஷ்ய நாட்டில் உள்ள மஞ்சள் வாலாட்டி, நீலச்சிறகு வாத்து, தட்டைவாயன், பூனைப்பருந்து, ஜப்பான், சீனாவில் காணப்படும் தலை ஆள்காட்டி உள்ளிட்ட 50 வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் வலசை வந்து செல்வது வழக்கம்.

