புதுடெல்லி: 'தமிழ்நாட்டின் மரங்களுக்கான மனிதர்' என்று அழைக்கப்படும் பேருந்து நடத்துநர் மாரிமுத்து யோகநாதன், கடந்த 36 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
இவருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நேற்று முன்தினம் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் 'சிறந்த இந்தியர்' விருதை வழங்கினார்.
"தமிழ்நாட்டில் பேருந்து நடத்து நராக பயணத்தைத் தொடங்கும் பலரும் ஒருசமயத்தில் புகழ்பெற்ற மனிதர்களாக மாறிவிடுகின்றனர். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் நம் மாரிமுத்துவும் ஒரு 'சூப்பர்ஸ்டார்'தான்," என்று அமைச்சர் பாராட்டினார்.
சிஎன்என்-நியூஸ் 18 தொலைக் காட்சி சார்பில், ஆண்டுதோறும் நாட்டின் பல துறைகளையும் சார்ந்த சாதனையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சிறந்த இந்தியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில், 'பருவநிலை மாற்றப் பிரச்சினை களுக்கான சிறந்த போராளி' என்ற பிரிவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து சிறந்த இந்தியர் விருதை வென்றுள்ளார்.
தன் பேருந்தில் பயணம் செய் பவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார் இவர். 8,500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளுக்குச் சென்றுள்ள இவர், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி மரக்கன்றுகளை விநியோகம் செய்து வருகிறார்.

