'சட்டமன்றத்தில் ஓபிஎஸ்சுக்கு இடம் ஒதுக்கக்கூடாது'

'சட்டமன்றத்தில் ஓபிஎஸ்சுக்கு இடம் ஒதுக்கக்கூடாது'

1 mins read
1aa64c0e-ec44-46d5-8bbb-abbdc4a05f22
-

சென்னை: சட்­டப்பேர­வை­யில் அதி­முக வரி­சை­யில் பன்னீர் செல்­வ­த்துக்கு இடம் ஒதுக்­கக் கூடாது என பழ­னி­சாமி தரப்பினர் மீண்­டும் வலி­யு­றுத்­தி உள்ளனர்.

சென்னை சேப்­பாக்­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார், "சட்­ட­மன்­றத்­தில் அதி­முக உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது போல் ஓ.பன்­னீர்­செல்­வத்துக்கும் அவ­ரது ஆத­ரவு எம்­எல்­ஏக்­க­ளுக்கும் இடம்கொடுக்­கக் கூடாது," என்று கூறி­னார்.

சட்டவிதி­க­ளின்­படி பேர­வைத் தலை­வர் அப்­பா­வு முடி­வெ­டுக்க வேண்­டும் என்­றும் வலியுறுத்தி உள்ள ஜெயக்குமார், "உயர் நீதி­மன்­றத்­தால் அதி­மு­க­வில் இருந்து ஓபி­எஸ் நீக்­கப்பட்டுள்ளது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு கட்சி என்­பதே கிடை­யாது. அதன்­பி­றகு அவ­ருக்கு எப்படி அதி­முக வரி­சை­யில் இடம் ஒதுக்கமுடி­யும்," என்­றும் அவர் கேட்­டுள்ளார்.

அம­முக பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி தின­க­ரன், அதி­மு­க­வு­டன் இணைந்து செயல்­பட விருப்­பம் தெரி­வித்­துள்­ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அம­மு­க­வு­டன் அதி­முக கூட்­டணி வைக்க 100 விழுக்காடு வாய்ப்பே இல்லை என்று திட்­ட­வட்­ட­மா­க மறுத்துள்ளார்.